வள்ளியின் வேலன்: வள்ளிக்காக உயிரை விட துணிந்த வேலன்! போட்டியில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வள்ளியின் வேலன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முதல் போட்டியில் ரஞ்சித் ஜெயிக்க கம்பு சுற்றும் போட்டி தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கம்பு சுற்றும் போட்டியில் தூக்கி வீசப்படும் பால்கள் மேலே படாமல் சுற்ற வேண்டும் என்று சொல்கின்றனர், ஆனால் ரஞ்சித் மீது ஒரு பால் பட அதை மறைப்பதற்காக அவன் வேலனின் கண்ணை கம்பால் அடித்து விடுகிறான்.

இரண்டு போட்டியிலும் நான் தான் ஜெயித்தேன். மதிப்பெண் சொல்லுங்க என்று சொல்லி கேட்க தமிழ் ஐயா கடைசியாக தான் மதிப்பெண் சொல்ல முடியும் என்று சொல்கிறார், அடுத்து திடீரென 4 பேர் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்து விடுகின்றனர்.
நீ தானே மினிஸ்டர் பொண்ணு என்று வள்ளியின் முகத்தை மூடி துப்பாக்கி முனையில் அழைத்து செல்ல ரஞ்சித் அவர்களிடம் சரண்டர் ஆகி விட வேலன் அவர்களை எதிர்த்து நின்று வள்ளியை தப்பிக்க வைக்கிறான், அவர்கள் வேலனை நோக்கி சுட வேலன் குண்டடி பட்டு கீழே சரிந்து விழுகிறான்.
வள்ளி பதறி போய் துடிக்க தமிழ் ஐயா அது டம்மி குண்டு தான், இது என்னுடைய செட்டப் தான் என்று சொல்கிறார், வேலன் அப்போ நான் இன்னும் சாகலையா என்று கண் விழிக்கிறான். வேலன் தனக்காக உயிரை விட துணிந்ததை பார்த்து வள்ளிக்கு அவன் மீது காதல் உருவாகிறது.
வேலனை கட்டி அணைத்து கொள்கிறாள், கடைசியில் கட்டி கொண்டது வள்ளியின் கனவு என தெரிகிறது. அதன் பிறகு ரஞ்சித் நான் தான் போட்டியில் ஜெயித்தேன் என்று சொல்ல தமிழ் ஐயா வள்ளிக்கு பாடி கார்டா இல்லாமல் நீ உன் உயிரை காப்பாத்திக்க தான் முயற்சி செய்த.. ஆனால் வேலன் அப்படி இல்ல, அதனால் வேலன் தான் வெற்றி பெற்றான் என்று அறிவிக்கிறார் ஐயா.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? ரஞ்சித் செய்ய போவது என்ன? என்பது குறித்து அறிய வள்ளியின் வேலன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.












Click it and Unblock the Notifications