அனிருத் இசையில் பாட கிடைக்கும் சரித்திர வாய்ப்பாமே... யாருக்கு அதிர்ஷடம்?
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்ற நிகழ்ச்சி என்று கூட சொல்லலாம். வெளிநாட்டு தமிழர்கள் ஆரம்பத்தில் வாக்களிப்பதில் காண்பித்த ஆர்வம் கொஞ்சமும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று.
அது பல சீசன்களைத் தாண்டி சென்று கொண்டு இருக்கும் நிலையில் இப்போது கிராண்ட் ஃபினாலே கோயம்புத்தூரில் இசை அமைப்பாளர் அனிருத் முன்னிலையில் நடக்க உள்ளது.
ரொம்ப ஆவலாக காத்திருக்கிறேன் என்று அனிருத் சொல்வது போலவே ரசிகர்களும் ஆவலாக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
வரைபட கலைஞர்
மூக்குத்தி முருகன் ஒரு ஓவிய கலைஞர். பார்ப்பவர்களை அப்படியே வரையக் கூடிய திறமை பெற்றவர்.இவர் பாடல் பாடிக்கொண்டே பல விஷயங்கள் செய்வார்.அதாவது பிரியங்காவுடன் லூட்டி அடிப்பது, அவரை சீண்டுவது என்று. ஆனால், பாடகர் பாலசுப்ரமணியத்தை பாடல் பாடிக்கொண்டே வரைந்தது ஒரு அற்புதம்.இவர் முறையாக சங்கீதம் பயிலவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தில் பாடி அனைவரையும் அசத்தி விட்டார்.
உள்ளிட்ட நாலு
கிராண்ட் ஃபினாலேக்கு மூக்குத்தி முருகன் உள்ளிட்ட 4 ஆண்கள், ஒரே ஒரு பெண் என்று தேர்வாகி உள்ளனர். இந்த 5 பேரும் கோயம்புத்தூரில் மிக பிரமாண்டமாக நடக்க இருக்கும் நேரலை நிகழ்ச்சியில் பாடும் அருமையான வாய்ப்பை பெற உள்ளனர்.
அனிருத் இசை
இதில் வெற்றி பெறப்போகும் போட்டியாளர் இசை அமைப்பாளர் அனிருத்தின் அருமையான இசையில் இவருடன் பாடும் வாய்ப்பை பெறுவார்கள். மனிதர் பேசும் போதும் குரல் கம்பீரமாக ஒலிக்கிறது. பாடும்போது அதை விட பல மடங்கு கம்பீரமாக ஒலிக்கிறது. ஆள்தான் பென்சில் மாதிரி...
பலருக்கும் அதிர்ஷடம்
விஜய் டிவியின் அனைத்து மேடைகளுமே பலருக்கும் வாய்ப்புக்களை அள்ளி அள்ளி தந்து இருக்கிறது. இப்போதும் இது போல அருமையான வாய்ப்பை அள்ளி வழங்க காத்திருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் வெற்றியாளர் யாராக இருக்கும்?