பாரதி கண்ணம்மாவில் கடைசியில் கண்ணம்மா செய்யப்போவது இதுதான்...மீண்டும் நெட்டிசன்கள் கலாய்க்க போறாங்க!
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி, லட்சுமி மற்றும் ஹேமா என்னுடைய குழந்தைகள் என ஏற்று கொண்டாலும் இனி கண்ணம்மா என்ன செய்வார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கடைசியில் முடிவு ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இல்லையாம்.
மீண்டும் நாம் சேர்ந்து வாழலாம் என்று ஒரு சில நாட்களாகவே கண்ணம்மா பாரதியிடம் கேட்டுக் கொண்டிருந்தாலும் பாரதி டெஸ்ட் ரிசல்ட் வந்த பிறகு தான் முடிவு சொல்ல முடியும் என்று கூறிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் பழைய நிலையில் மீண்டும் கண்ணம்மா மாறி இருக்கிறார்.
வெண்பாவின் நாடகத்தை போட்டு உடைத்த ஹேமா..ரோகித்தின் எதிர்பார்க்காத முடிவு.. பரபரப்பான கடைசி கட்டம்
நெட்டிசனுக்கு பிடித்த சீரியல்
நெட்டிசனுக்கு அதிகமாக பிடித்த ஒரு சீரியல் என்றால் பாரதிகண்ணம்மா சீரியல் ஆக தான் இருக்க முடியும். இந்த சீரியலை ஆரம்பத்தில் இருந்து நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்து ட்ரோல் செய்தே இந்த சீரியல் டாப் லெவல் வந்துவிட்டது. ஒவ்வொரு எபிசோடும் அதிகமாக கலாய்க்கப்பட்டு வரும், ஒரு சில நாட்கள் இதை நெட்டிசன்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால் நெட்டிசங்களை தூண்டும் விதமாகவே அடுத்த நாள் எபிசோடு வந்துவிடுகிறது. எந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் பாகம் விரைவில் முடிவடையும் என்று ஒரு சில மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் அப்பாடா என்று பெருமூச்சு விட்டு வந்தனர். ஆனாலும் சீரியல் முடிவடைவது போல இல்லை. ஒவ்வொரு நாளும் புதுப்புது திருப்பங்களோடு கதை இழுத்துக் கொண்டே வருகிறது.
உண்மையை கூறிய பாரதி
இந்த நிலையில் தற்போது ஹேமா தன்னுடைய அப்பா யார் என்று தெரிந்து கொள்வதற்காக தற்கொலை செய்து கொள்வதாக மருத்துவமனையின் மொட்டை மாடியில் நின்று நாடகம் போட்டுக் கொண்டிருக்க, ஏற்கனவே பல வருட போராட்டத்திற்கு பிறகு இப்போது தான் டிஎன்ஏ டெஸ்ட் பார்த்து அதில் ஹேமாவும் லட்சுமியும் தன்னுடைய குழந்தைகள் என்று தெரிந்து சந்தோஷமாக குடும்பத்தோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று வரும் பாரதி ஹேமாவின் செயலால் அதிர்ச்சியாகி நான் தான் உன்னுடைய அப்பா. உனக்கும் லட்சுமிக்கும் என்று உண்மையை கூறி, நான் தான் கண்ணம்மாவை தொட்டி தாலி கட்டிய கணவர் என்று சொல்கிறார். அதை நம்பாத ஹேமா நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்கள் என்று கூறிக் கொண்டிருக்க இதுதான் உண்மை என மொத்த குடும்பமும் சொல்கிறது.
கண்ணம்மாவின் கடைசி முடிவு
இதுவரைக்கும் பாரதி எங்கே சென்றார் எதற்காக சென்றார் என்பது தெரியாமல் இருந்த குடும்பத்தினரிடம் நான் எங்கள் மூவருக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதற்காக ரத்த மாதிரி இப்போதுதான் டிஎன்ஏ டெஸ்ட் முடிவு எனக்கு தெரிந்தது. நீங்கள் இருவரும் என்னுடைய குழந்தைகள்தான் என்று மண்டியிட்டு அனைவரிடமும் மன்னிப்பு கேட்க, கண்ணம்மா அலட்சியமாக பார்க்கிறார் .ஏற்கனவே ஒரு சில வாரங்களுக்கு முன்பு நான் இதை எத்தனை தடவை சொன்னாலும் கேட்காத பாரதியை கடைசி நேரத்தில் இனி நான் ஏற்றுக் கொள்ள போறதில்லை. நாம் வேணும் என்றால் ஒன்றாக வாழலாம் ஆனால் நீங்கள் என் மனதில் இருந்து எப்போதோ வெளியேறி விட்டீர்கள். இனி நான் உங்களை கணவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடைசி நேரத்தில் பல்டி அடிக்க இருக்கிறாராம்.
வெண்பாவிற்கு இதுதான் நிலைமை
அடுத்ததாக வெண்பா தான் இதுவரைக்கும் ஏமாற்றி வைத்திருந்த உண்மைகள் எல்லாம் பாரதிக்கு தெரிந்து விட்டது என அதிர்ச்சியாகி இருக்கின்றார். அது மட்டும் அல்லாமல் இதுவரைக்கும் வெண்பாவுக்கு உதவி செய்தது நான் தான் என்று பழைய மருத்துவமனையில் இருந்த கமொண்டர் மொத்த உண்மைகளையும் சொல்லப்போகிறார். அதே நேரத்தில் ஹேமாவை கடத்தியது வெண்பா தான் என்ற உண்மையும் கடைசியில் தெரியப் போகிறது. இதை கண்டுபிடித்து போலீஸ் வெண்பாவை கைது செய்ய போகிறது. இதற்கு பிறகு இரண்டாவது பாகத்தில் இதை நினைத்து இதற்காகவே வெண்பா பாரதி மற்றும் கண்ணம்மாவை மீண்டும் பலி வாங்க தொடங்குவாராம்.