அந்த நடிகை 5 ஸ்டார் ஓட்டலில் செய்த வேலை.. நாய்க்கு கேரவன்? AC ரூம்? கிறுகிறுத்த புரொடியூசர்: பிரபலம்
சென்னை: ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் சில நடிகைகள் காட்டும் கெடுபிடிகளால் தயாரிப்பாளர்கள் பணம்தான் விரயமாவதாக பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து ஒரு பேட்டியில், தயாரிப்பாளர்களின் வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளார்.
AramNaadu யூடியூப் சேனலுக்கு பாலாஜி பிரபு தந்துள்ள பேட்டியில், "நடிகைகள் தங்களது சாப்பாட்டிலிருந்து அலப்பறையை துவங்குவார்கள்.. இந்த மீன் வேணும், அந்த மீன் வேணும் என்று மீனிலேயே நான்கைந்து ஐட்டங்கள் கேட்பார்கள். அதுவும் பெரிய பெரிய ஃபைவ் ஸ்டார் ஓட்டல்கள்தான் இவங்க கண்ணுக்கு தெரியும்..

அப்படி அவர்கள் கேட்கும் சாப்பாடு எல்லாமே, எக்ஸ்க்ளூசிவ் சாப்பாடுதான்.. மீனில் மட்டுமே 8 ஐட்டம் வாங்குவாங்க.. இதையெல்லாம் அந்த நடிகையால சாப்பிட முடியுமா? அப்படி சாப்பிட்டுவிட்டு, சீன் ஏதாவது நடிக்க முடியுமா? உடனே டச்சப்-பாய் முதல் எல்லாருக்கும் அந்த சாப்பாட்டை பிரித்து தந்துடுவார்.. ஸ்டார் ஓட்டலில் ஆர்டர் செய்யும்போதே எல்லாருக்கும் சேர்த்தே ஆர்டர் பண்ணிடுவாங்க. இதெல்லாம் தயாரிப்பாளர் செலவுதான்.
தயாரிப்பாளர் செலவு: இன்னும் சில நடிகைகள், ஷூட்டிங்கில் இருந்துகொண்டு, தங்கள் வீட்டில் உள்ள அம்மா, பாட்டி, சித்தி மகள், இவங்களுக்கெல்லாம் சேர்த்து சாப்பாடு ஆர்டர் போகும் இதுக்கும் தயாரிப்பாளர் காஸ்ட்தான். இது காலம் காலமாக நடந்துட்டு இருக்கு.
போதாக்குறைக்கு இப்போதெல்லாம் வீடுகளில் 4, 5 நாய்களை வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.. இந்த நடிகைகள் வளர்ப்பது எல்லாமே காஸ்ட்லி நாய்கள்தான். இவர்களுக்கு ஷூட்டிங் என்றாலும், அந்த நாய்களும் ஃப்ளைட்டில் பறந்து வரும்.
பிரபல நடிகை: ஒரு பிரபல நடிகை, எந்த ஊருக்கு போனாலும், தன்னுடைய நாயை கூட்டிட்டு போவாங்க.. அப்படித்தான் பெங்களூரில் ஷூட்டிங் சென்றபோது நாய்க்கும் சேர்த்து ஓட்டலில் ரூம் போட சொன்னாங்க.. உடனே தயாரிப்பாளர், நடிகைக்கு 5 ஸ்டார் ஓட்டலிலும், நாய்க்கு, அங்கேயே நான்கைந்து கட்டிடம் தாண்டியிருந்த சாதாரண சின்ன ஓட்டலிலும் ரூம் புக் செய்தார்.
இந்த விஷயம் தெரிந்த நடிகை, நாய்க்கு எதுக்கு சாதாரண ஓட்டலில் ரூம் போட்டீங்க? நாய் இல்லாமல் என்னால் இருக்க முடியாது, 5 ஸ்டார் ஓட்டலிலேயே ரூம் போடுங்க என்றார்.
வேதனை: உடனே அந்த தயாரிப்பாளர், அதே 5 ஸ்டார் ஓட்டலில் "நான்-ஏசி" ரூம் புக் செய்தார். ஆனால், அந்த நகை, நாய்க்கும் ஏசி ரூம் வேண்டும் என்று அடம் பிடித்தார்.. அந்த நாய் 5 ஸ்டார் ஓட்டல் சாப்பாட்டைதான் சாப்பிடுமாம். கடைசியில் நடிகைக்கு 25,000, நாய்க்கு 25,000 ரூம் பில் வந்தது. அந்த தயாரிப்பாளரை சில வருடம் கழித்து நான் பார்த்தபோது, அவரது மனநிலைமையே மோசமாகியிருந்தது.. இப்படித்தான் இன்னொரு நடிகை, தன்னுடைய நாய்க்கு கேரவன் கேட்டு அடம்பிடித்தார்" என்றெல்லாம் சம்பவங்களை கூறி வேதனை தெரிவித்தார் பாலாஜி பிரபு.












Click it and Unblock the Notifications