ஆண்ட்டியால் "காலி" ஆனாரா நடிகர் கரண்? அந்தம்மா யார்னு தெரியுமா? வதந்திக்கு பிரபலம் முற்றுப்புள்ளி
சென்னை: பிரபல நடிகர் கரணின் மார்க்கெட் சரிவுக்கு என்ன காரணம்? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய சபிதா ஜோசப், ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டதுதான் கரணின் படவாய்ப்புகள் இழக்க காரணமே தவிர, மற்றபடி வில்லன் கேரக்டருக்கான வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வந்துகொண்டேயிருந்தன என்றும் விரிவாக பேசியிருக்கிறார்.
Realone யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "கரணின் சொந்த பெயர் ரகு.. தமிழகத்தை சேர்ந்தவர். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.. நம்மவர் படத்தில் வில்லனாக நடித்தபோது, வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.. கணணெதிரே தோன்றினாள், லவ் டுடே போன்று ஹீரோவுக்காக சில படங்களை செய்தார்.

கரணின் மேனேஜர்
விஜய், அஜித், பிரசாந்த் என ஹீரோக்களுடன் நட்புடன் வரக்கூடிய கேரக்டராக நடித்திருந்தார். ஹீரோவாக சில படங்கள் நடித்ததுடன், சில படங்களை சொந்தமாக தயாரிக்க ஆரம்பித்தார்,. அப்போது அந்த பெண், கரணிடம் மேனேஜராக பணியாற்றி கொண்டிருந்தார். ஆண்ட்டி என்று சொல்லப்படுபவர் பெயர் லட்சுமி.. கரணின் கால்சீட்டை பார்த்து கொண்டிருந்தார்.. கரணின் சம்பளம், கம்பெனி பேசுவது என அனைத்து பணிகளையும் லட்சுமி பார்த்து கொண்டிருந்தார்.
வில்லனுக்கான ஸ்கோப் கரணுக்கு இருந்தாலும், ஹீரோவாக நடிப்பதிலேயே ஆர்வம் காட்டினார்.. அதனால்தான், வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.. வில்லனுக்கான வாய்ப்புகள் அதிகமாகவே வந்தது.
பேஜர் மெசேஜ் வந்தது
லட்சுமி - கரண் இருவரும் நல்ல நட்புடன் இருந்தார்கள்.. ஒருமுறை என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று சொல்லி லட்சுமியிடமிருந்து எனக்கு "பேஜர்" மெசேஜ் வந்தது.. அதற்குள் மௌனம் ரவி என்னை சந்தித்து, "லட்சுமி தற்கொலைக்கு முயற்சிக்க போறாங்க போல, உன்னை தேடி கொண்டிருந்தார்" என்று தகவலை சொன்னார்..
உடனே நான் லட்சுமியை சந்திக்க சென்றேன்.. அப்போது அவர் என்னிடம், "கரண் சார் முன்பு போல என்னிடம் பேசுவதில்லை. அவரிடம் யாரோ சந்தேகத்தை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.. அல்லது அவரது வீட்டில் யாராவது ஏதாவது சொன்னார்களா தெரியவில்லை.. எனக்கு வருத்தமாக இருக்கு. தற்கொலை செய்து கொள்ளலாம் போலிருக்கு" என்றார்.
ஒருவர் கஸ்டடியில் ஒருவர்
அதற்கு நானும், பலபேர் பல விதமாக பேசினாலும், உங்களது தொழில் இதுதான்.. ஒரு நடிகருக்கு, மேனேஜராக பெண் உள்ளதால் இப்படியான பேச்சுக்கள் வரத்தான் செய்யும்.. வெளியிலிருந்து பார்க்கும்போது, உங்களில் ஒருவர் கஸ்டடியில் இன்னொருவர் இருப்பதாக தோன்றத்தான் செய்யும்.. மேனேஜராக உங்கள் பணியை வழக்கம்போல் தொடருங்கள் என்று தைரியம் சொன்னேன்.
மௌனம் ரவியும் அவருக்கு ஆறுதல் சொன்னார். இதற்கு பிறகு எங்களுக்கு லட்சமி நன்றி சொல்லிவிட்டு போனார்.. மற்றபடி லட்சுமியால் கரண் படவாய்ப்புகளை இழந்தார் என்றெல்லாம் சொல்ல முடியாது.
சுற்றியிருப்பவர்களே காரணம்
லட்சுமி பார்ப்பதற்கு அழகாக இருப்பார்.. பொதுவாக மேனேஜர்கள் என்றாலே, பணிபுரியும் நடிகருடன் ஒன்றாகவே காரில், அலுவலகத்தில் பயணிக்க வேண்டியிருக்கும். அப்படித்தான் லட்சுமிக்கும் நிகழ்ந்திருக்கலாம்..
இவர்களை எப்போதுமே ஒன்றாக பயணிப்பது குறித்து கரணின் வீட்டில் யாராவது எதையாவது சொல்லியிருக்கலாம். அல்லது நண்பர்கள் மத்தியில் யாராவது ஏதாவது சொல்லியிருக்கலாம்.. அதனால்கூட இப்படியொரு முடிவை வீட்டில் எடுத்திருக்கலாம். ஆனால், சினிமா தெரிந்தவர் லட்சுமி.. பல தயாரிப்பாளர்களை அறிந்தவர் லட்சுமி.. இது ஒரு நடிகராக கரணுக்கு மிகவும் உதவியாக இருந்தது. எனினும் சுற்றியிருப்பவர்கள்தான் கரண் மனதை மாற்றியிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications