Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாய்க்குட்டியுடன் பிரபல நடிகர் வீட்டுக்கு போய், காதலை சொன்ன தேசிய விருது நடிகை.. பிறகு என்னாச்சு?ஓஹோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்கள் எப்போதுமே 22 வயதுக்கு மேல் திருமணம் செய்தால்தான், உலகம் என்றால் என்ன என்று புரியும்.. ஆனால், எனக்குதான் எல்லாமே முடிந்துவிட்டது" என்று பிரபல நடிகை லட்சுமி தன்னுடைய பேட்டிகளில் வருத்தப்பட்டு சொல்வாராம். இந்த தகவல்களை மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.

Behind cinema என்ற யூடியூப் சேனலுக்கு பாண்டியன் பேட்டி தந்துள்ளார்.. அதில், மூத்த நடிகை லட்சுமியின் திருமண வாழ்க்கை பற்றி பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார்.. அதன் சுருக்கம்தான் இது:

actress national award

வாழ்க்கை வெறுத்தார்: "சொந்த வாழ்க்கையில், 17 வயதில் லட்சுமிக்கு திருமணமானது.. பாஸ்கர் என்ற இளைஞருடன் இந்த திருமணம் நடந்தது.. 5 வருடம் அவருடன் குடும்பம் நடத்தினார்.. ஆனால், ஐஸ்வர்யா பிறந்த பிறகு, 5வது வருடமே விவாகரத்து ஆகிவிட்டது. விவாகரத்து ஆனது.. 17 வயதில் திருமணமாகி, 22 வயதிலேயே டைவர்ஸ் என்பதால், மிகவும் இடிந்துபோனார் லட்சுமி.

இதைப்பற்றி அடிக்கடி லட்சுமி பேட்டிகளில் சொல்வார், "இளம் வயதில் எனக்கு திருமணம் செய்துவிட்டார்கள்.. 22 வயதில், பெண் குழந்தையோடு எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. உலகம் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன்பேயே, என்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது. பெண்கள் எப்போதுமே 22 வயதுக்கு மேல் திருமணம் செய்தால்தான், உலகம் என்றால் என்ன என்று புரியும்.. ஆனால், எனக்குதான் எல்லாமே முடிந்துவிட்டது" என்று வருத்தப்பட்டுள்ளார்.

சட்டக்காரி: பிறகு "சட்டக்காரி" என்ற மலையாள படத்தில் நடித்தார்.. மிக அருமையாக அதில் நடித்திருப்பார்.. அவருக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம் அதுவாகும்.. அதில், மோகன் ஷர்மா என்பவருடன் இணைந்து நடித்திருந்தார்.. பிற்காலத்தில் அவரையே திருமணம் செய்து கொண்டார் லட்சுமி.

மோகன் ஷர்மாவுக்கு அப்போது திருமணம் நடக்கவில்லை.. மோகன் ஷர்மாவை லட்சுமி விரும்பினார்.. ஒருநாள் மோகன் ஷர்மாவை சந்திப்பதற்காக ஒரு நாய்க்குட்டியை வாங்கிக் கொண்டு, திருவனந்தபுரத்துக்கு சென்றார் லட்சுமி.. மோகன்ஷர்மாவிடம், "இந்த நாய்க்குட்டி போல உங்களையே சுற்றி சுற்றி வருவேன், என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்ட திருமணமாகாத மோகன் சர்மாவும், குங்குமத்தை எடுத்து, லட்சுமியின் நெற்றியில் வைத்து அவரை மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

இந்த ஜோடியை கேரளா திரையுலகமே வாழ்த்தியது.. ஆனால், மீண்டும் அவரை விவாகரத்து செய்துவிட்டு, சிவசந்திரனை 3வது திருமணம் செய்து கொண்டார் லட்சுமி.

ஐஸ்வர்யா: 2வது கணவர் மோகன் சர்மாவுடன் வசித்த காலத்தில், மகள் ஐஸ்வர்யாவுடனும் லட்சுமிக்கு சண்டை வந்தது.. ஒரே வீட்டில் ஐஸ்வர்யா, மோகன் சர்மா, லட்சுமி இந்த 3 பேராலும் இருக்க முடியவில்லை.. மோகன் ஷர்மா பிரிந்து சென்றதற்கும், ஐஸ்வர்யா பிரிந்து செல்வதற்கும் இதுதான் காரணம் என்று இன்றுவரை நம்பப்பட்டு வருகிறது" என்றெல்லாம் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+