பெங்களூரை தொடர்ந்து கேரளாவிலும் குண்டு வெடிப்பு! அச்சத்தில் மக்கள்.. போலீஸ் தீவிர விசாரணை
திருவனந்தபுரம்: கேரளாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கேரளா மாநிலம் கண்ணூரில் இன்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் வெடி குண்டு வெடித்திருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். சில நாட்களுக்கு முன்னர்தான் கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருந்தது. இது பெரும் பீதியை கிளப்பியிருந்த நிலையில், கண்ணூரிலும் வெடி குண்டு வெடித்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "கண்ணூரின் பனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முளியத்தோட்டில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதில் இரண்டுபேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் சிபிஎம் உறுப்பினர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. இருவதில் ஒருவருக்கு மிக மோசமான அளவில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இந்த விபத்து அதிகாலை ஒரு மணியளவில் நடந்திருக்கிறது. விபத்திற்கான காரணம், என்ன? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்" என்று கூறியுள்ளனர். கேரளாவில் பாஜக இல்லையென்றாலும், அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் தீவிரமாக இயங்கி வருகிறது. இதனால் அடிக்கடி சிபிஎம் ஊழியர்களுக்கும், ஆர்எஸ்எஸ் ஊழியர்களுக்கும் இடையில் மோதல்கள் நடக்கும். இந்த மோதல்கள் உச்சகட்டத்தைத எட்டும்போது உயிரிழப்புகளும் ஏற்படும்.
அந்த வகையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்து இரு தரப்பு மோதலினால் ஏற்பட்டதா? அல்லது வெடிகுண்டு தயாரிக்கும் போது தவறுதலாக விபத்து ஏற்பட்டு குண்டு வெடித்திருக்கிறதா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சமீபத்தில் பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் சலசலப்புகள் இன்னும் குறையாத நிலையில், இப்போது கேரளாவிலும் குண்டு வெடித்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
-
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications