நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்.. திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: வெடிகுண்டு மிரட்டல் காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில், ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கியவுடன் பயணிகள் உடனடியாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மும்பை விமான நிலையத்திலிருந்து, ஏஐ 657 எனும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் அதிகாலை 5.45 மணிக்கு, மும்பையிலிருந்து புறப்பட்டது. புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications