கொரோனா பாதித்தவருக்கு 2 எச்ஐவி மருந்து.. கேரளாவில் நடந்த சோதனை வெற்றி.. உடனே குணமான அதிசயம்!
கொரோனா பாதித்த ஒருவருக்கு எச்ஐவி தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதித்த ஒருவருக்கு எச்ஐவி தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்து இருப்பது பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் எல்லாம் திணறி வருகிறது. கொரோனா இத்தனை வீரியமாக பரவ காரணம், அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான்.
கொரோனாவை தற்போது மருந்து கொடுத்து நேரடியாக குணப்படுத்த முடியவில்லை. மாறாக அதன் பக்க விளைவுகளை குணப்படுத்தி, கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதன் மூலம்தான் உலகம் முழுக்க மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள்.

மருந்து கொடுக்கிறார்கள்
கொரோனாவிற்காக இந்தியாவில் குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஆகிய மருந்துகளை கொடுக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள். குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் இரண்டும் மலேரியாவிற்கு கொடுக்கப்படும் மருந்து ஆகும். மலேரியா மற்றும் கொரோனா இரண்டும் ஒரே மாதிரி செயல்படும் பண்பு கொண்டுள்ளது. அதனால் கொரோனாவிற்கும் குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எச்ஐவி எப்படி
அதேபோல் சில நாடுகளில் எபோலாவிற்கு அளிக்கப்படும் மருந்துகளும் கொரோனாவிற்கு அளிக்கப்படுகிறது. வெகு சில நாடுகளில் எச்ஐவிக்கு அளிக்கப்படும் மருந்துகளும் கொரோனாவிற்கு கொடுக்கப்படுகிறது. லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் ஆகிய மருந்துகளின் கலவை சில நாடுகளில் கொரோனாவிற்கு அளிக்கப்படுகிறது. தற்போது கேரளாவிலும் லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் மருந்துகள் கொரோனாவிற்கு எதிராக அளிக்கப்பட்டுள்ளது.

லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் என்றால் என்ன
லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் என்பது எச்ஐவியை தடுக்க கூடிய அல்லது கட்டுப்படுத்த கூடிய மருந்து ஆகும்.எச்ஐவி வந்தால் உடலில் உள்ள, எதிர்ப்பு சக்தி மொத்தமாக குறையும். லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் இரண்டும் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்த உதவும். கொரோனாவும் இதேபோல்தான் செயல்படுகிறது. அதனால் அதற்கு எதிராகவும் லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர்வை பயன்படுத்தி வருகிறார்கள்.

கேரளா எப்படி
இந்த நிலையில் கேரளாவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட லண்டன் நபருக்கு லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் அளிக்கப்பட்டுள்ளது. இவர் எர்ணாகுளம் மெடிக்கல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு கடந்த 23ம் தேதி லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் அளிக்கப்பட்டது. கேரளா சுகாதாரத்துறை அனுமதியோடு இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது.

வெற்றி வெற்றி
இந்த நிலையில் நேற்று இரவு வந்த ரிசல்ட்டின்படி, அந்த லண்டன் நபருக்கு கொரோனா இல்லை என்று உறுதியாகி உள்ளது. லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் கொடுத்த பின் அந்த லண்டன் இளைஞருக்கு கொரோனா குணமாகி உள்ளது. கேரளாவில் இது மிகப்பெரிய நல்ல செய்தியாக வந்துள்ளது. மேலும் சில நபர்களுக்கு இதே போல் லோபினாவிர் மற்றும் ரிட்டினோவிர் கொடுக்க அம்மாநில அரசு ஆலோசனை செய்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications