Delta: டெல்டா ஒருபக்கம்.. ஒமிக்ரான் மறுபக்கம்.. ஒரே வாரத்தில் 100% பாதிப்பு.. சிக்கி தவிக்கும் கேரளா
கேரளாவில் கொரோனாவைரஸ் தாக்கம் அதிகரித்தபடியே உள்ளது
திருவனந்தபுரம்: கேரளாவில் டெல்டா, ஒமிக்ரான் என இரண்டு வகை வைரஸ்களின் தாக்கம் உள்ளதாகவும், ஒரே வாரத்தில் 100 சதவீதம் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன என்றும் அம்மாநில சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட முக்கிய மாநிலங்களில் ஒன்று கேரளா.. அங்கு கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.
கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது.. மற்றொரு பக்கம் ஒமிக்ரான் வைரஸ் பரவல் பீதியும் சூழ்ந்து கொண்டுள்ளது.

இயற்கை சீற்றம்
ஏற்கனவே மழை, வெள்ளம் என இயற்கை பாதிப்பில் சிக்கி கொண்ட கேரளா, மெல்ல மெல்ல மேலெழுந்து வரும் நிலையில், தொற்றை கட்டுப்படுத்த எத்தனையோ முயற்சிகளை கையில் எடுத்தது.. இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த மாதங்களில் நோரோ, ஜிகல்லா உள்பட சில வைரஸ் நோய்களும் கேரளாவில் பரவி மேலும் அச்சத்தை ஏற்படுத்திவிட்டது.. அதேபோல, ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் பரவி அம்மக்களை நிலைகுலைய செய்துவிட்டது.

திணறல்
மற்ற பிரச்சனைகளை ஒருவழியாக சமாளித்து விட்டாலும் கொரோனாவைரஸ் தொற்றை மட்டும் கட்டுப்படுத்த முடியாமல் திணறி கொண்டிருக்கிறது.. இப்போதைக்கு கிட்டத்தட்ட 64 ஆயிரம் பேருக்கு டெஸ்ட் செய்ததில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.. நேற்று 5,797 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.. இதுவரை 52,91,280 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது..

உயிரிழப்பு
அதேபோல, கேரளாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.. நேற்று முன்தினம் மட்டும் ஒரேநாளில் 296 பேர் உயிரிழந்துள்ளனர்.. ஒரு லட்சத்து 28 பேர் இப்போது தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.. இவர்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை மற்றும் வீட்டு கண்காணிப்பில் உள்ளார்கள்.. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 14.18% ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video

டிஸ்சார்ஜ்
இந்நிலையில், அம்மாநில சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இதை பற்றி செய்தியாளர்களிடமும் பேசினார்.. அப்போது, நேற்று முன்தினம் வரை 345 ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன... 155 பேர் டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.. இந்த அளவுக்கு தொற்று உயர்வுக்கு காரணம் டெல்டா வகையால் எண்ணிக்கை உயருவதுதான்.. டெல்டா, ஒமிக்ரான் 2 வைரஸ்களின் தாக்கமும் இருக்கின்றன.. அதனால்தான், ஒரே வாரத்தில் 100 சதவீத கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications