Delta: டெல்டா ஒருபக்கம்.. ஒமிக்ரான் மறுபக்கம்.. ஒரே வாரத்தில் 100% பாதிப்பு.. சிக்கி தவிக்கும் கேரளா
கேரளாவில் கொரோனாவைரஸ் தாக்கம் அதிகரித்தபடியே உள்ளது
திருவனந்தபுரம்: கேரளாவில் டெல்டா, ஒமிக்ரான் என இரண்டு வகை வைரஸ்களின் தாக்கம் உள்ளதாகவும், ஒரே வாரத்தில் 100 சதவீதம் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன என்றும் அம்மாநில சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட முக்கிய மாநிலங்களில் ஒன்று கேரளா.. அங்கு கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.
கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது.. மற்றொரு பக்கம் ஒமிக்ரான் வைரஸ் பரவல் பீதியும் சூழ்ந்து கொண்டுள்ளது.

இயற்கை சீற்றம்
ஏற்கனவே மழை, வெள்ளம் என இயற்கை பாதிப்பில் சிக்கி கொண்ட கேரளா, மெல்ல மெல்ல மேலெழுந்து வரும் நிலையில், தொற்றை கட்டுப்படுத்த எத்தனையோ முயற்சிகளை கையில் எடுத்தது.. இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த மாதங்களில் நோரோ, ஜிகல்லா உள்பட சில வைரஸ் நோய்களும் கேரளாவில் பரவி மேலும் அச்சத்தை ஏற்படுத்திவிட்டது.. அதேபோல, ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் பரவி அம்மக்களை நிலைகுலைய செய்துவிட்டது.

திணறல்
மற்ற பிரச்சனைகளை ஒருவழியாக சமாளித்து விட்டாலும் கொரோனாவைரஸ் தொற்றை மட்டும் கட்டுப்படுத்த முடியாமல் திணறி கொண்டிருக்கிறது.. இப்போதைக்கு கிட்டத்தட்ட 64 ஆயிரம் பேருக்கு டெஸ்ட் செய்ததில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.. நேற்று 5,797 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.. இதுவரை 52,91,280 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது..

உயிரிழப்பு
அதேபோல, கேரளாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.. நேற்று முன்தினம் மட்டும் ஒரேநாளில் 296 பேர் உயிரிழந்துள்ளனர்.. ஒரு லட்சத்து 28 பேர் இப்போது தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.. இவர்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை மற்றும் வீட்டு கண்காணிப்பில் உள்ளார்கள்.. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 14.18% ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video

டிஸ்சார்ஜ்
இந்நிலையில், அம்மாநில சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இதை பற்றி செய்தியாளர்களிடமும் பேசினார்.. அப்போது, நேற்று முன்தினம் வரை 345 ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன... 155 பேர் டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.. இந்த அளவுக்கு தொற்று உயர்வுக்கு காரணம் டெல்டா வகையால் எண்ணிக்கை உயருவதுதான்.. டெல்டா, ஒமிக்ரான் 2 வைரஸ்களின் தாக்கமும் இருக்கின்றன.. அதனால்தான், ஒரே வாரத்தில் 100 சதவீத கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன" என்றார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications