கலங்கி நிற்கும் கடவுள் தேசம்.. 46 சதவீதம் பற்றாக்குறை.. கண்ணாமூச்சி காட்டும் பருவமழை!
திருவனந்தபுரம்: பருவமழை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏமாற்றிக் கொண்டு இருப்பதால் வறட்சியை நோக்கி கேரளா சென்று கொண்டிருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 46 சதவீதம் பருமவழை பற்றாக்குறையாகியுள்ளது.
கடவுள் தேசம் என்று வர்ணிக்கப்படும் பகுதி கேரளா. நீர் நிலைகள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களையும் கொண்ட கேரளாவில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மழையின் அளவு கொஞ்சம் அதிகம். தென்மேற்கு பருவமழையின் போது கேரள மாநிலம் கணிசமான அளவு மழைப்பொழிவு பெறும். ஜூன் தொடங்கிவிட்டாலே கேரளாவில் மழை தொடங்கி வெளுக்க ஆரம்பித்துவிடும். இரண்டு, மூன்று மாதங்கள் கேரளாவில் ஒரே மழையாகத்தான் இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு இதற்கு நேர்மாறான நிலை நிலவுகிறது. கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி இந்த ஆண்டு பருவமழை பெய்தது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கேரளாவில் 174.6 செ.மீட்டர் மழை பெய்வது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டு 91.68 செ.மீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது. இதனால், நடப்பு ஆண்டு 48 சதவீதம் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் பருவமழை மிகவும் பொய்த்து போய்விட்டது.
அதாவது ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 42.6 செ.மீட்டர் மழை இயல்பாக பெய்யும் ஆனால் இந்த முறை வெறும் 6 செ.மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. கிட்டத்தட்ட 86 சதவீதம் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த 1911 ஆம் ஆண்டு 18.2 செ.மீட்டர் மழை பெய்தது. அதன்பிறகு தற்போதுதான் இந்த அளவுக்கு மோசமாக ஆகஸ்ட் மாதத்தில் மழைப்பொழிவு கேரளாவில் இருந்துள்ளது.
பருவமழை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏமாற்றிக் கொண்டு இருப்பதால் வறட்சியை நோக்கி கேரளா சென்று கொண்டிருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒருவேளை வறட்சி ஏற்படும் அபாயம் இருந்தால் நீர் நிலைகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கேரள அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.
செப்டம்பர் முதல் வாரத்தில் கேரளாவில் மழைப்பொழிவு நன்றாக இருக்கும் என வானிலை அமைப்புகள் கூறியிருப்பதால் சற்றே நிம்மதிஅடைந்துள்ளனனர். இருந்தாலும் மழை பொய்க்கும் பட்சத்தில் 2016 ஆம் ஆண்டை போல மிகக் கடுமையான வறட்சி ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களை விட இடுக்கியில் மிக மோசமான அளவு மழைப்பொழிவு இருந்துள்ளதாக கேரள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை நடப்பு மாதம் இறுதி வரை உள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications