பிரபல இயக்குனர் வீட்டில் கொள்ளை.. ரூ.1 கோடி மதிப்பிலான தங்க-வைர நகைகள் அள்ளிச்சென்ற கும்பல்.. ஷாக்
திருவனந்தபுரம்: பிரபல திரைப்பட இயக்குனர் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் தங்க, வைர நகைகள் உள்பட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் ஜோஷி. பிரபல திரைப்பட இயக்குனர். இவர் நடிகர் மம்முட்டியின் ஆ ராத்திரி திரைப்படத்தை இயக்கினார். மலையாள சினிமாவில் ஒரு படம் ரூ.1 கோடிக்கு மேல் முதல் முதலில் வசூல் செய்தது என்றால் அது இந்த படம் தான். இதுதவிர பல முன்னணி நடிகர்களின் படத்தை ஜோஷி இயக்கி உள்ளார்.

இந்நிலையில் தான் ஜோஷி தனது குடும்பத்துடன் எர்ணாகுளத்தில் உள்ள பனம்பிள்ளி நகரில் வசித்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு ஜோஷி தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்க சென்றார். இன்று காலையில் கண்விழித்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டில் பல அறைகளில் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ, அலமாரிகள் திறந்து கிடந்தன. அதோடு அதில் இருந்த வைர, தங்க நகைகள் ரொக்கப்பணம், வாட்ச் உள்ளிட்டவை மாயமாகி இருந்தன. யாரோ மர்மநபர்கள் இரவில் வீட்டுக்குள் நுழைந்து தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுபற்றி ஜோஷியின் மகன் அபிலாஷ் சார்பில் எர்ணாகுளம் தெற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 1 மணியளவில் முகத்தில் துணிக்கட்டிக்கொண்டு ஒரு கும்பல் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் என்ட்ரியாவதும், அதன்பிறகு அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.
இதுபற்றி எர்ணாகுளம் துணை போலீஸ் கமிஷனர் ராஜ்குமார் கூறுகையில், ‛‛வீட்டு சமையலறையில் உள்ள ஜன்னல் வழியாக நுழைந்த கும்பல் கொள்ளையடித்துள்ளது. முதல் தளத்தில் உள்ள பெட்ரூம் மற்றம் அறைகளில் உள்ள பொருட்களை அள்ளி சென்றுள்ளனர்'' என்றார். மேலும் போலீசார் கூறுகையில், ‛‛வீட்டில் இருந்து ஒரு வைர நெக்லஸ், 10 வைர மோதிரம், 12 வைர கம்மல், 2 தங்க மோதிரம், 10 தங்க செயின், 10 தங்க வளையல்கள், விலையுயர்ந்த 10 கைக்கடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியாகும்.
சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்த பார்த்தால் மிகச்சரியாக திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதோடு ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதோடு வெளிமாநில கொள்ளையர்கள் மீதும் சந்தேகம் உள்ளது. விசாரணை நடந்து வருகிறது. விரைவில் கொள்ளையர்களை பிடித்துவிடுவோம்'' என்றார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications