Jayaram: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு.. அமலாக்கத்துறை முன் ஜெயராம் ஆஜர்.. கிடுக்கிப்பிடி விசாரணை
திருவனந்தபுரம்: கேரள சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அமலாக்கத்துறை ஒருபுறம் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக தனியாக வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் நடிகர் ஜெயராமுக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று நடிகர் ஜெயராம் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகினார். அப்போது அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. உலக புகழ்பெற்ற இந்தக் கோயிலில், துவாரக பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசியபோது 4.5 கிலோ தங்கம் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது ஐயப்ப பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக அம்மாநில கூடுதல் டிஜிபி வெங்கடேஷ் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உன்னிகிருஷ்ணனிடம் 10 மணி நேரம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்திய எஸ்.ஐடி பிரிவு போலீசார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தனர்.
ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன்
புகாரின்பேரில் உன்னி கிருஷ்ணன் போத்தி உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் தங்க தகடுகள் வைத்து பூஜை செய்த படங்கள் வெளியாகின. இதையடுத்து ஜெயராமிடம் எஸ்.ஐ.டி பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, இதில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது. கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை இந்த வழக்கை பதிவு செய்தது. இதையடுத்து, ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
நேரில் ஆஜராகி விளக்கம்
இந்த சம்மனை ஏற்று ஜெயராம் இன்று கொச்சி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராம், "இந்த விவகாரத்தில் உண்மைகள் வெளிவரட்டும். இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் உண்மையை வெளியில் கொண்டு வருவது ஒவ்வொரு மலையாள மக்களின் கடமையாகும்" என்றார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications