பிரபல தமிழ் நடிகை.. மருத்துவமனையில் அனுமதி.. திடீர் உடல்நலக்கோளாறு.. என்னாச்சு..?
திருவனந்தபுரம்: பிரபல நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
மலையாளம் மற்றும் தமிழ் பட உலகில் பிரபலமான நடிகை நவ்யா நாயகர்.. கடந்த 2001ல் 'இஷ்டம்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். இந்த ஒரு படத்திலேயே, ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெற்றவரும்கூட.

அசாத்திய நடிப்பு:
இதற்கு பிறகு, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து, வெகு சீக்கிரத்தில் முன்னுக்கு வந்தவர்.. இதற்கு முழுமுதற் காரணம், நவ்யாவின் அசாத்தியமான நடிப்பு திறமைதான்.
மலையாளத்தை தொடர்ந்து, தமிழிலும் நவ்யா நாயர் நடித்துள்ளார்.. குறிப்பாக, 2004ல் பிரசன்னாவுடன் இணைந்து, 'அழகிய தீயே' படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், சில நேரங்களில், ராமன் தேடிய சீதை, போன்ற படங்களிலும் நடித்தார்.. தமிழில் நடித்திருந்தது சில படங்களே என்றாலும், மக்களின் மனதில் அகலாமல் நிறைந்துவிட்டார். அதிலும், முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய 'பாசக்கிளிகள்' படத்தில் இவரது நடிப்பு அபாரமாக பேசப்பட்டது.
மீண்டும் என்ட்ரி:
சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நவ்யா, திரையுலகில் இருந்து முழுமையாக விலகிக்கொண்டார்.. இவருக்கு மகன் ஒருவரும் இருக்கிறார். நீண்ட காலத்திற்குபிறகு மறுபடியும் மலையாள திரை உலகில் ரீஎன்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.. இதற்காகவே, 'ஜானகி ஜானே' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.. விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.
அதாவது, 13 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் நவ்யா நாயரை வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான் திடீரென நவ்யாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
"ஜானகி ஜானே" படத்தின் புரோமோஷன் வேலைக்காக, நிறைய இடங்களுக்கு சென்று வந்திருக்கிறார்.. இதனால், உணவு ஒவ்வாமை பிரச்சனையால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. உடனடியாக கோழிக்கோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே, மருத்துவமனையில் நவ்யா நாயர் படுத்திருக்கும் போட்டோவும் வெளியாகி உள்ளது..

கவலை:
இதைப்பார்த்து ரசிகர்களும், நண்பர்களும் மனம்கலங்கி போனார்கள்.. விரைவில் நவ்யா நலம் பெற வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, நவ்யா நாயருக்கு உடல்நிலை குணமடைந்தவுடன், ஓரிரு நாட்களில் ரத்து செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சி மறுபடியும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications