கேரளாவில் வெளுத்த மழை- இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூருக்கு ரெட் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

கேரளாவில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கேரளா மாநிலம் முழுவதும் தொடர்ந்து கனமழை கொட்டுகிறது.

Heavy rain lashes Kerala, IMD issues red alert for 3 districts

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆழப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் வெளுத்தெடுத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் அதி தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இடுக்கியில் உள்ள சிறுதோணி அணை முழு கொள்ளளவை நெருங்கியது இதனால் சிறுதோணி அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கேரளாவில் சில பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஏற்கனவே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் திரும்பிய திசை எங்கும் வெள்ளம்தான். தற்போது, மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகள் நிரம்பிய நிலையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கி இருக்கின்றன. வெள்ளத்தில் சிக்கிய மக்கள், படகுகள் மூலம் மீட்கப்பட்டும் வருகின்றனர்.

கன்னியாகுமரி வெள்ள பாதிப்பு தொடர்பாக இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், சென்னை மூன்று நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டால், கன்னியாகுமரி மாவட்டம் கடந்த மூன்று வாரங்களாக, ஒரு சில நாட்கள் தவிர, தொடர் மழையை அனுபவித்து வருகிறது. கடந்த 15 நாட்களில் பெய்த மழையை விட, நான்கு நாட்களாக பெய்து வரும் மழை பல மடங்கு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது; இன்னும் ஏற்படுத்தும் எனவும் கூறியிருந்தார்.

தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் என்கிறது வானிலை ஆய்வு மையம். ற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இருக்கும் என்பது வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+