இடுக்கி உள்பட 6 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்.. கண்முன் நிழலாடும் 2018 வெள்ளம்.. கலக்கத்தில் கேரளம்
Recommended Video

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் ஜூலை 18, 19, 20 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்பதாலும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டியும் இந்திய வானிலை மையம் முறையே சிவப்பு மற்றும் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறுகையில் இடுக்கி, மலப்புரம், வயநாடு, கண்ணனூர், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை
இங்கு 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து வந்தால் இயற்கை பேரிடர்களான வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகியன நடைபெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

கனமழை
கனமழையை கருத்தில் கொண்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜூலை 17- ஆம் தேதி இடுக்கி, 18-ஆம் தேதி கோட்டயம், 19-ஆம் தேதி எர்ணாகுளம், பாலக்காடு, 20-ஆம் தேதி பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணனூர் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் அலர்ட்
ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 115 மி.மீ. முதல் 204.5 மி.மீ வரை மழை பெய்யும். அது போல் ஜூலை 17-ஆம் தேதி கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணனூர், ஜூலை 18-ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணனூர், காசர்கோடு, ஜூலை 19-ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், கோழிக்கோடு, காசர்கோடு, ஜூலை 20-ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் அச்சம்
எனவே அனைவரும் வானிலை அறிவிப்புகளின் எச்சரிக்கைகளை பின்பற்றுமாறு பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின்போது கனமழையால் மாநிலமே சின்னாபின்னமான நிலையில் தற்போது இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications