2வது முறையாக நிலச்சரிவு.. கேரளாவின் வயநாட்டில் மீண்டும் பரிதாபம்.. பலர் பலியானதாக அச்சம்
கேரளாவின் வயநாடு பகுதியில் மீண்டும் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு பகுதியில் மீண்டும் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக மும்பை, கேரளா ஆகிய இடங்களில் அதிகமாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மஹாராஷ்டிராவில் மும்பை உட்பட பல நகரங்கள் நீரில் மூழ்கிவிட்டது.

அதேபோல் கர்நாடகாவிலும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கும் இதனால் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக மிக கனமழை பெய்து வருகிறது. வயநாடு, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பாலக்காடு, திரிச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. அதேபோல் இன்று மீண்டும் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிக வீடுகள் உள்ள பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பலர் பலியாகி இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
வயநாட்டில் உள்ள புதுமழை பகுதியில் மழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 40 பேர் இந்த நிலச்சரிவில் தற்போது மாட்டிக்கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 25 பேர் வரை இந்த நிலச்சரிவில் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தற்போது வரை நிலச்சரிவில் இருந்து 100 பேர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications