கேரளாவில் இன்று ஜன.14-ல் பொங்கல் விடுமுறை - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் தமிழர்கள் வாழும் 6 மாவட்டங்களில் இன்று ஜன.14-ல் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் கேரளா மக்களின் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கேரளாவிலும் ஜனவரி 14-ந் தேதி தமிழர்கள் வாழும் 6 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு வந்தது.

ஜன.15-ல் விடுமுறை என அறிவிப்பு
ஆனால் நடப்பாண்டில் ஜனவரி 15-ந் தேதி அரசு விடுமுறை என கேரளா அரசு அறிவித்தது. இதனால் குழப்பம் ஏற்பட்டது. மேலும் இதனை மாற்றி அறிவிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தை முதல் நாள் பொங்கல்
கேரளா தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் பேச்சி முத்து இது தொடர்பாக கூறுகையில், தை மாதம் முதல் தேதிதான் பொங்கல். ஆனால் தை 2-ந் தேதி பொங்கல் விடுமுறை என கேரளா அரசு அறிவித்திருக்கிறது. இதனால் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்கள் விவரத்தை கேரளா அரசுக்கும் அனுப்பி உள்ளோம் என்றார்.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இது தொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமும் அனுப்பி இருந்தார். அக்கடித விவரம்: தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14ஆம் தேதி, புனிதமான தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்; ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15ஆம் நாளினை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா அரசு மாற்றி அறிவிப்பு
ஆகவே, தமிழ்ச் சமூகங்களிடையே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14 ஆம் இன்றுஅறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். கேரளா அரசு இதனை உடனடியாக ஏற்று தமிழர்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களில் இன்று ஜனவரி 14-ந் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி!












Click it and Unblock the Notifications