இன்புட் கொடுத்த எதிர் சீட் பயணி.. கோழிக்கோடு ரயிலுக்கு தீ வைத்த நபரின் வரைபடம் வெளியீடு
திருவனந்தபுரம்: கோழிக்கோடு ரயிலுக்கு தீ வைத்த நபரின் வரைபடத்தை கேரளா போலீஸார் வெளியிட்டுள்ளனர். இதை வைத்து தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.
Recommended Video
ஆலப்புழா- கண்ணூர் விரைவு ரயில் கோழிக்கோடு மாவட்டம், எலத்தூர் ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு 9.37 மணிக்கு டி1 கோச்சில் பயணம் செய்த பெண் உள்பட பயணிகள் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார்.
இதனால் ரயில் பெட்டி எரிய தொடங்கியது. இதையடுத்து சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். உடனே அந்த நபர் ரயிலை விட்டு இறங்கியோடினார்.

9 பேர் காயம்
இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். மேலும் அந்த ரயில் பயணித்த ரயில் தண்டவாளத்தில் ஒரு ஆண், பெண், ஒரு வயது குழந்தை ஆகியோர் உடல்கள் சிதறி கிடந்தன. இவர்கள் ரயிலுக்கு தீ வைத்த நேரத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அந்த ரயில் பெட்டியிலிருந்து குதித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

உடல் சிதைந்த மூவர்
அந்த மூவரின் உடல்கள் இருந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மேலும் எலத்தூர் ரயில் நிலையம் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த நபர் கருப்பு சிகப்பில் சட்டையும் கருப்பு நிறத்தில் பேண்டும் அணிந்திருந்தார். மேலும் அவருடைய முதுகில் ஒரு பை மாட்டியிருந்தார்.

இரு சக்கர வாகனம்
ஒரு இரு சக்கர வாகனம் வந்தது. அதில் அவர் தப்பி சென்றார். அதற்கு முன்னதாக யாருடனோ செல்போனில் பேசியபடியே நின்றிருந்தார். மேலும் அதே கோச்சில் அவருக்கு எதிரே அமர்ந்திருந்த ரஷீக் என்பவரின் உதவியுடன் போலீஸார் அந்த மர்மநபரின் வரைபடத்தை தயார் செய்து வந்தனர். இந்த நிலையில் அவருடைய படம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை வைத்து போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கைக்குட்டை
அந்த நபர் தலையில் கைக்குட்டை போல் அணிந்திருந்தார். லேசாக தாடியிருந்தது. அது போல் மார்பு பகுதியில் இருக்கும் முடிகள் கழுத்து வரை இருந்தது. அவர் ஒல்லியாக இருந்தார் என பயணிகள் கூறுகிறார்கள். அந்த நபர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

மர்ம டைரி
மேலும் சந்தேகிக்கப்படும் நபருடைய டைரி என சொல்லப்படும் ஒரு பொருளை அவர் அமர்ந்திருந்த இருக்கை அருகே போலீஸார் கைப்பற்றினர். அதில் ஆங்கிலம், இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்தன. அதில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய ஊர்களின் பெயர் எழுதப்பட்டிருந்தது. ஒரு வேலை அந்த நபர் நாசவேலை செய்து ரயிலை விபத்துக்குள்ளாக்கி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவற்றையெல்லாம் செய்தாரா என்பது தெரியவில்லை. அந்த நபர் கைது செய்யப்பட்டால்தான் அவர் குறித்து தெரியவரும்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications