பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய காங்கிரஸ் மூத்த தலைவர் அப்துல்லா குட்டி கட்சியிலிருந்து நீக்கம்!
திருவனந்தபுரம்: காந்தி கூறியதை போல, ஏழைகளை மனதில் வைத்து மக்கள் நலத்திட்டங்களை பிரதமர் மோடி வகுத்து செயல்படுத்தி வருவதாக கேரள காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அப்துல்லா குட்டி புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநில காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஏ.பி.அப்துல்லா குட்டி. இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், பிரதமர் மோடியை அவ்வப்போது புகழ்ந்து பேசி வருகிறார். சில தினங்களுக்கு முன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளி இருந்தார்.

காந்தீய கொள்கையின் அடிப்படையில் தனது நிர்வாகத்தை நடத்துவதால் பிரதமர் மோடி வெகுவாக பிரபலமடைந்துள்ளார். பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்கள் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றிருப்பதே இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான காரணம்.
மகாத்மா காந்தி கூறியதைபோல, ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்தையும் உருவாக்குவதற்கு முன்னர் ஏழைகளின் முகத்தை நினைவுகூற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார். சுவச் பாரத் திட்டத்தின் கீழ் 9.26 கோடி குடும்பத்தினருக்கு கழிப்பிட வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
அதேபோன்று, உஜ்வாலா திட்டத்தின் கீழ் 6 கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பும், இலவச மின்சாரத்தையும் வழங்கி இருக்கிறார். அரசியல் விமர்சகர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிக்கின்றனர். அதற்கு முன்னதாக, பாஜக தேர்தலில் வெற்றி பெற்றதற்கான காரணங்களை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்," என்று தெரிவித்திருந்தார்.
இந்த ஃபேஸ்புக் பதிவு காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், விிளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இன்று கட்சியிலிருந்தும் நீக்கியுள்ளது.
பிரதமர் மோடியை புகழ்ந்து பேசுவது அப்துல்லா குட்டிக்கு புதிதல்ல. கடந்த 2009ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். அப்போது, அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணூர் எம்.பி.யாக இருந்தார்.
மோடியை புகழ்ந்து பேசியதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அன்றைய தினமே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அத்துடன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதால், விரைவில் அவர் பாஜக.,வில் ஐக்கியமாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications