ஆடை உரிமை உண்டு.. கேரளாவில் ஆசிரியைகள் சேலை அணிவது கட்டாயம் கிடையாது- அமைச்சர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆசிரியைகள் கட்டாயம் புடவை அணிய வேண்டும் என்பதில்லை. அது போன்ற நடைமுறையை அமல்படுத்துவது ஆக்கப்பூர்வமானதாக இருக்காது. உடை அணிவது அவரவர் விருப்பம் என்று கேரள உயர்கல்வி துறை அமைச்சர் ஆர் பிந்து தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள், பேராசிரியர்கள்,கல்லூர் விரிவுரையாளர்கள் சேலை அணிந்து வர வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என கேரள அரசுக்கு புகார்கள் வந்தன.

நாகரிகமான ஆடைகளை அணியும் உரிமை பெண்களுக்கு உண்டு. இதை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் பிந்து ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பேராசிரியர்கள்

பேராசிரியர்கள்

அதில் பெண் ஆசிரியைகள் , பேராசிரியர்கள் ஆடை அணவதில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. அவர்கள் நிச்சயம் புடவையைதான் அணிய வேண்டும் என்பதில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில் கூறுகையில் உடை விவகாரத்தில் கேரள அரசு பலமுறை தனுத நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டது. தங்கள் உடலின் வசதிக்கு ஏற்பவும் கல்வி நிறுவனத்திற்கு ஏற்பவும் உடை அணிய அவர்களுக்கு உரிமை உண்டு. ஆசிரியைகள் என்றால் கட்டாயம் சேலைதான் அணிய வேண்டும் என்றில்லை. அது கேரளாவில் கட்டாயமில்லை.

ஆடை விஷயம்

ஆடை விஷயம்

காலத்துக்கு உதவாக மாற்றத்தையும் சிந்தனைகளையும் ஏற்க வேண்டிய அவசியமில்லை. ஒருவர் ஆடை அணிவது அவரின் தனிப்பட்ட முடிவு. ஒருவரது ஆடை விஷயத்தை விமர்சிக்கவோ தலையிட்டுக் கருத்து கூறவோ யாருக்கும் உரிமையில்லை. கேரளா போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட மாநிலத்தில் ஆசிரியைகள் சேலை அணிந்து வர வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என தனது உத்தரவில் பிந்து தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு அரசாணை

மேலும் ஒரு அரசாணை

ஆடை விவகாரம் தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி அரசு தெளிவாக அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் கூடுதலாக இந்த அரசாணையையும் அமைச்சர் பிந்து வெளியிட்டுள்ளார். திருச்சூரில் கேரள வர்மக் கலை கல்லூரியில் பேராசிரியையாக இருந்த அமைச்சர் பிந்து சுடிதாரை அணிந்து கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

சுடிதார்

சுடிதார்

திருவண்ணாமலை ஜவ்வாது மலை அரசு தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை மகாலட்சுமி, மாணவிகளுடன் நண்பியை போல் பழகவும் அவர்களுடன் விளையாடவும் புடவை சவுகரியப்படாது என்பதால் மாணவிகளும் அணியும் சீருடை நிறத்தில் சுடிதார் அணிந்து கொண்டு பள்ளிக்கு வரும் சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+