கேரளாவில் மலரும் தாமரை.. இந்தியா கூட்டணிக்கு காத்திருக்கும் ஷாக்.. இந்தியா டுடே எக்ஸிட் போல் முடிவு
திருவனந்தபுரம்: லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், கேரளாவில் தாமரை மலரும் என்று ஏபிபி சிவோட்டர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
கேரளாவில் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கேரளாவில் அரசியல் 2 மிகப் பெரிய கூட்டணிகளால் நடத்தப்படுகிறது. மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF). இன்னொன்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF).

இந்த இரு கூட்டணிகளுமே கேரளாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு பாஜக இதுவரை வெற்றிக்கணக்கை தொடங்கியதே இல்லை. இந்த லோக்சபா தேர்தலில் எப்படியாவது வெற்றிக்கணக்கை தொடங்க வேண்டும் என்ற பாஜக பல்வேறு வியூகங்களுடன் பிரசாரத்தை மேற்கொண்டது. கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி ஒரே கட்டமாக இங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் (ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது. ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும், கேரள காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக 16 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் ஏபிபி சிவோட்டர் கேரளாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில், பாஜக இந்த முறை வெற்றிக்கணக்கை தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி சிவோட்டர் கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ் கூட்டணி 17 முதல் 19 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பாஜக கூட்டணி 1 முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளது.
ஏபிபி சிவோட்டர் கருத்துக்கணிப்பு
கேரளாவில் மொத்த லோக்சபா தொகுதிகள்: 20 இடங்கள்
* காங்கிரஸ் கூட்டணி: 17 - 19 இடங்கள்
* பாஜக கூட்டணி: 1 - 3 இடங்கள்
* எல்.டிஎப் கூட்டணி: 0.












Click it and Unblock the Notifications