உங்களுக்கு பாடம் புகட்டுவேன்.. வயநாட்டில் ராகுலை எதிர்க்கும் சரிதா நாயர்.. தேர்தலில் போட்டி!
கேரளாவில் வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து சரிதா நாயர் போட்டியிட உள்ளார்.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து சரிதா நாயர் போட்டியிட உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு இது பெரிய அதிர்ச்சியை அளித்து உள்ளது.
கேரளாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய மோசடி குற்றச்சாட்டுதான் சோலார் பேனல் மோசடி. சோலார் பேனல்களை வாங்கி விற்பதில் முறைகேடு நடந்து இருக்கிறது. இதில் மக்களை பலர் ஏமாற்றி இருக்கிறார்கள்.
பல கோடிகளை அப்போதைய காங்கிரஸ் அரசு சுருட்டி இருக்கிறது என்று 2013ல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளிகளாக சரிதா நாயரும் அவரின் காதலர் பிஜு ராதாகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டார்கள்.

புகார் அளித்தார்
இந்த ஊழலில் முன்னாள் கேரளா காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டி பெயரும் அடிபட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் பரபரப்பு திருப்பமாக சரிதா நாயர், காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார்கள். பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்கள் என்று புகார் அளித்தார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
நடுங்க வைக்கும் புகார்கள்.. இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

தேர்தலில் போட்டி
இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் தற்போது சரிதா நாயர் போட்டியிடுகிறார். ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில் இவர் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். ராகுல் காந்தி தான் கொடுத்த புகார்களுக்கு செவிமடுக்கவில்லை. அதனால் அவருக்கு எதிராக போட்டியிட போகிறேன் என்று அவர் கூறி இருக்கிறார்.

இன்னொரு இடம்
அதேபோல் இவர் எர்ணாகுளம் தொகுதியிலும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். எர்ணாகுளம் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ஹிபி ஈடன் போட்டியிடுகிறார். இவர் மீதுதான் சரிதா முதன்முதலாக பாலியல் தொல்லை புகார் அளித்தார். அதனால் அவருக்கு எதிராகவே இப்போது போட்டியிடுகிறார்.

பேட்டி
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சரிதா, நான் எனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்து ராகுல் காந்திக்கு பலமுறை கடிதங்கள் எழுதினேன். ஆனால் அவர் பதில் அளிக்கவே இல்லை. அதனால்தான் இப்போது காங்கிரஸ் கட்சியினருக்கு பாடம் புகட்ட தேர்தலில் நிற்கிறேன். எனக்கு நியாயம் கிடைத்தால் போதும், தேர்தலில் வெற்றி பெற ஆசை கிடையாது, என்று கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications