ஒரு பக்கம் கொரோனா.. இன்னொரு பக்கம் ஜிக்கா.. கேரளாவில் அதிகரிக்கும் கேஸ்கள்.. மேலும் 4 பேர் பாதிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் ஜிக்கா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
கேரளாவில் ஒரு பக்கம் கொரோனா இரண்டாம் அலை கேஸ்கள் குறையாமல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்னொரு பக்கம் ஜிக்கா வைரஸ் கேஸ்கள் அங்கு அதிகரித்து வருகிறது.
நேற்று வரை கேரளாவில் பத்து கேஸ்கள் கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 4 பேருக்கு ஜிக்கா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோரும் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள். இதனால் கேரளாவில் மொத்த ஜிக்கா வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

சோதனை
அங்கு பலர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் இன்னும் பலரை சோதனை செய்ய கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து கேரளாவில் ஜிக்கா வைரஸ் பரவல் குறித்து ஆராய மத்திய சுகாதாரத்துறையின் 6 பேர் கொண்ட குழு அந்த மாநிலத்திற்கு சென்றுள்ளது.

அறிவுரை
ஜிக்கா வைரஸ் குறித்து சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து மாவட்டங்களுக்கும் இது தொடர்பாக அறிவுரைகளை வழங்கி இருக்கிறோம். ஜிக்கா வைரஸை பரப்பும் கொசுக்களை அழிப்பது தொடர்பாகவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பணிகளை முடுக்கி விட்டு இருக்கிறோம் என்று கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

வீணா ஜார்ஜ்
திருவனந்தபுரத்தில் நேற்று குழந்தை பிரசவித்த பெண் ஒருவருக்கும் ஜிக்கா வைரஸ் தாக்கி உள்ளது. காய்ச்சலோடு அனுமதிக்கப்பட்ட இவருக்கு நேற்று குழந்தை பிறந்தது. ஜிக்கா வைரஸ் கிட்டத்தட்ட டெங்கு வைரஸ் போன்றதாகும். இந்த வைரஸ் கொசுக்கள் மூலம் பரவ கூடியது. உடலில் தடிப்புகள், காய்ச்சல், தோல் சிவப்பது. எலும்பு வலி ஆகியவை ஜிக்கா வைரஸ் ஏற்பட்டால் உண்டாகும்.

பிரேசில்
பிரேசிலில் 2015ல் பலருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட பாதிப்பில் கர்ப்பிணிகள் பலர் நோய் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதனால் குழந்தைகள் பலர் மோசமான உடல்நிலையுடன், பாதிப்புகளுடன் பிறந்தது. ஜிக்கா வைரஸ் கொசுக்கள் மூலம் மட்டுமின்றி, இந்த வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட நபருடன் உடலுறவு கொண்டாலும் பாதிப்பு ஏற்படும்.

எங்கு
உகாண்டாவில் 1947ல் குரங்குகளுக்கு இந்த வைரஸ் தாக்கியது. 1952ல் பின் மனிதர்களுக்கு தாக்கியது. பின்னர் பல்வேறு ஆப்ரிக்க, ஆசிய நாடுகளுக்கு கொசுக்கள் மூலம் பரவியது குறிப்பிடத்தக்கது. உடலுறுவு மூலம் கர்ப்பிணிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் னாய் கட்டுப்பாட்டு துறை நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா
அங்கு ஜிக்கா வைரஸ் ஒரு பக்கம் பரவும் நிலையில் இன்னொரு பக்கம் கொரோனா கேஸ்களும் குறையாமல் பரவி வருகிறது. கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு இன்னும் குறையவில்லை. அங்கு இன்று 13,563 கேஸ்கள் பதிவாகி உள்ளது. ஆக்டிவ் கேஸ்கள் 1,13,120 ஆக உள்ளது. இந்தியாவில் பதிவாகும் மொத்த கேஸ்களில் கிட்டத்தட்ட 30% கேஸ்கள் தற்போது கேரளாவில் இருந்து மட்டுமே பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications