Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் ‛லக்’.. ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிய கோவில் அர்ச்சகர்.. கைக்கொடுத்த கேரளா லாட்டரி!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ‛நான் அடிச்ச மணி கடவுளுக்கே கேட்டுடிச்சி பாத்தியா’ என்ற வகையில் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறி உள்ளார் கோவில் அர்ச்சகர். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு எண் வித்தியாசத்தில் லாட்டரியில் ரூ.70 லட்சத்தை தவறவிட்ட இந்த கோவில் அர்ச்சகர் தற்போது ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறி உள்ளார்.

நம் மாநிலத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிர்ஷ்டத்தை நம்பி பலரும் உழைக்கும் காசில் லாட்டரி வாங்கி பணத்தை இழந்தது தான் முக்கிய காரணமாகும்.

kerala lottery temple priest


ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனை நடைமுறையில் உள்ளது. அரசு அனுமதியுடன் இந்த லாட்டரி சீட் விற்பனை நடந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது.

குறிப்பாக ஓணம் உள்பட சில முக்கிய பண்டிகை நாட்களில் பரிசு தொகை என்பது அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் பரிசுத்தொகை லட்சம், ஒரு கோடி வரை இருக்கும். இந்நிலையில் தான் Fifty Fifty லாட்டரிக்கான குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் FT 506060 என்ற எண்ணுக்கு முதல் பரிசாக ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்தது.

இந்த லாட்டரியை கோவில் அர்ச்சகர் மதுசூதனன் என்பவர் கிருஷ்ணா லாட்டரி ஏஜென்ஸியில் இருந்து வாங்கியிருந்தார். இதனால் கோவில் அர்ச்சகரான மதுசூதனன் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறி உள்ளார். இவர் மேப்பாறை பகுதியில் உள்ள மகாவிஷ்ணு கோவிலில் 20 ஆண்டுகளாக தலைமை அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.

தற்போது லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு தொகை வென்றுள்ள அர்ச்சகர் மதுசூதனனுக்கு அதிரா என்ற மனைவியும், வைஷ்ணவி, வைகாலட்சுமி என்ற 2 மகள்களும் உள்ளனர். இதனால் மதுசூதனன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உச்சத்துக்கே சென்றுள்ளார். ஏனெ்னறால் மதுசூதனன் அவ்வப்போது லாட்டரி வாங்கி அதிர்ஷ்டத்தை நம்புவது உண்டு.

இதுவரை அவருக்கு சிறிய சிறிய தொகை தான் பரிசாக கிடைத்து வந்தது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மதுசூதனன் வாங்கிய லாட்டரி சீட்டின் ஒரு எண் வித்தியாசத்தில் ரூ.70 லட்சம் பரிசுத்தொகை என்பது தவறிப்போனது. இதனால் அவரும், அவரது குடும்பத்தினரும் கவலையடைந்தனர்.

ஆனாலும் கூட அதிர்ஷ்ட காற்று ஒருமுறையாவது தன்னை நோக்கி வீசும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அர்ச்சகர் மதுசூதனன் லாட்டரி வாங்கி வந்தார். இந்நிலையில் தான் தற்போது அவருக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது அவரை கோடீஸ்வரராக மாற்றி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+