Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காரில் கொச்சி மாநகராட்சி அதிகாரி சொப்னா.. அடுக்குமாடி குடியிருப்புவாசிகளால் ஒரே அசிங்கமா போச்சு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் கட்டிட ஆய்வாளராக வேலை செய்து வரும் சொப்னா என்பவர், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கதவு எண் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்க வந்ததாக கூறப்படுகிறது. தனது மூன்று குழந்தைகளுடன் காரில் வந்தவரை ரகசியமாக கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பிடித்தனர். ஆனால் குழந்தைகள் முன்பு அவரை கைது செய்யாமல் மனிதாபிமானத்துடன் நடந்த அதிகாரிகள், அதன்பிறகு என்ன செய்தார்கள் என்பதை பார்ப்போம்.

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் மீது அந்தந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க முடியும். லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது அந்தந்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். அந்த வகையில் கொச்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What happened when the authorities arrested Kochi Corporation officer Swapna

கேரள மாநிலம் கொச்சி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் கட்டிட ஆய்வாளராக 34 வயதாகும் சொப்னா பணிபுரிந்து வருகிறார். இவர் திருச்சூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். மாநகராட்சி அதிகாரி சொப்னாவிடம் எர்ணாகுளம் மாவட்டம் பொன்னூரணி பகுதியில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் வீடுகளுக்கு கதவு எண் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இந்த விண்ணப்பத்தை பார்த்த சொப்னா ரூ.15 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர், கொச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சொப்னாவை தொடர்பு கொண்டபோது, லஞ்ச பணத்தை கொடுக்க பொன்னூரனி பாலம் அருகே வருமாறு கூறினாராம்., அங்கு உரிமையாளர் சென்றார். அப்போது காரில் சொப்னா தனது 3 குழந்தைகளுடன் இருந்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக உரிமையாளர் கொடுத்தார். இதை அவர் காரில் இருந்தவாறு பெற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் ரகசியமாக கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சொப்னாவை பிடித்தனர். காரில் 3 குழந்தைகள் இருந்ததால், அவரை போலீசாரால் உடனடியாக கைது செய்து அழைத்து செல்லவில்லை.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், குழந்தைகளை அவரது கணவரிடம்அனுப்பி வைத்த பின்னரே சொப்னாவை கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+