காரில் கொச்சி மாநகராட்சி அதிகாரி சொப்னா.. அடுக்குமாடி குடியிருப்புவாசிகளால் ஒரே அசிங்கமா போச்சு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் கட்டிட ஆய்வாளராக வேலை செய்து வரும் சொப்னா என்பவர், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கதவு எண் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்க வந்ததாக கூறப்படுகிறது. தனது மூன்று குழந்தைகளுடன் காரில் வந்தவரை ரகசியமாக கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பிடித்தனர். ஆனால் குழந்தைகள் முன்பு அவரை கைது செய்யாமல் மனிதாபிமானத்துடன் நடந்த அதிகாரிகள், அதன்பிறகு என்ன செய்தார்கள் என்பதை பார்ப்போம்.
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் மீது அந்தந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க முடியும். லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது அந்தந்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். அந்த வகையில் கொச்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொச்சி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் கட்டிட ஆய்வாளராக 34 வயதாகும் சொப்னா பணிபுரிந்து வருகிறார். இவர் திருச்சூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். மாநகராட்சி அதிகாரி சொப்னாவிடம் எர்ணாகுளம் மாவட்டம் பொன்னூரணி பகுதியில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் வீடுகளுக்கு கதவு எண் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இந்த விண்ணப்பத்தை பார்த்த சொப்னா ரூ.15 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர், கொச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சொப்னாவை தொடர்பு கொண்டபோது, லஞ்ச பணத்தை கொடுக்க பொன்னூரனி பாலம் அருகே வருமாறு கூறினாராம்., அங்கு உரிமையாளர் சென்றார். அப்போது காரில் சொப்னா தனது 3 குழந்தைகளுடன் இருந்துள்ளார்.
இதையடுத்து அவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக உரிமையாளர் கொடுத்தார். இதை அவர் காரில் இருந்தவாறு பெற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் ரகசியமாக கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சொப்னாவை பிடித்தனர். காரில் 3 குழந்தைகள் இருந்ததால், அவரை போலீசாரால் உடனடியாக கைது செய்து அழைத்து செல்லவில்லை.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், குழந்தைகளை அவரது கணவரிடம்அனுப்பி வைத்த பின்னரே சொப்னாவை கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications