Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இயேசப்பா.. இன்னும் எனக்கு கல்யாணமே ஆகலயே".. நைட் நேரத்தில் சர்ச்சில்.. யார் இவர்? என்னாச்சு பாருங்க

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இருட்டு நேரத்தில் பைக்கில் வந்த நபர் செய்த காரியம், கேரள மாநிலத்தையே அதிர வைத்து கொண்டிருக்கிறது. என்ன நடந்தது ? யார் இவர்?

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ளது கட்டப்பனா என்ற பகுதி.. இங்கிருந்து கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கம்பம்மெட்டு என்ற ஊர்.

Who is this Kerala man and Why he pelted stones at eight shrines breaking the glass covers in Idukki


இந்த பகுதியில் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள்தான்.. அதிலும், சாலையோரங்களில் ஏராளமான சர்ச்கள் வழிநெடுகிலும் காணப்படும்.. சின்ன சின்ன தேவாலயங்கள் என்றாலும், இந்த பகுதி மக்களால் பெரிதும் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அதிர்ச்சி:
இந்நிலையில், கடந்த மார்ச் 12ம் தேதி, இந்த பகுதியிலிருக்கும் சர்ச்களின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. கிட்டத்தட்ட ஒரே ஏரியாவில், ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட சர்ச்களின் மீது கல்லெறியப்பட்டுள்ளது... இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. மறுநாள் காலையில் சர்ச்சுக்கு வந்தவர்கள், இப்படி ஒரு காரியத்தை செய்திருந்ததை கண்டு அதிர்ந்தனர்.

சர்ச்சுகளில் வைக்கப்பட்டிருந்த மாதா உருவங்கள், கடவுளரின் படங்கள் சேதமாகி கிடந்தன.. கண்ணாடி பெட்டகங்கள் அனைத்துமே சுக்குநூறாக நொறுக்கப்பட்டிருந்தன. இதனால் தேவாலயங்கள் சார்பில் உடனடியாக வந்தன்மேடு போலீசுக்கு புகார் தரப்பட்டது.. போலீஸாரும் இதுகுறித்த வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த பகுதியிலிருக்கும் எல்லா சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தனர்.

கல்வீசி தாக்குதல்: அப்போதுதான், ஒரு நபர் பைக்கில் வந்து, ஒவ்வொரு சர்ச் வாசலிலின் முன்பும் பைக்கை நிறுத்துவதும், கற்களை சர்ச்சுக்குள் வீசி எறிந்துவிட்டு, பைக்கில் தப்பி செல்வதும் பதிவாகியிருந்தது. இதையடுத்து, அந்த வீடியோவிலிருந்த பைக்கின் நம்பரை வைத்து, சம்பந்தப்பட்டவரின் முகவரியை தேடி கண்டுபிடித்தனர்.

சம்பந்தப்பட்டவர் பெயர் செருக்குன்னில் ஜோபின் ஜோஸ் என்பது தெரியவந்ததையடுத்து, போலீசார் நேரடியாகவே அவர் வீட்டுக்குள் நுழைந்து அவரை கைது செய்தனர்.

விசாரணை:
பிறகு அவரிடம் விசாரணையையும் மேற்கொண்டார்கள்.. ஜோஸூக்கு 35 வயதாகிறது.. இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம்.. 25 வயதிலிருந்தே கல்யாணம் செய்ய, ஆசையாக இருந்திருக்கிறார்.. அப்போதிருந்தே பெண் தேடி வந்துள்ளார். ஆனால், ஒவ்வொருமுறையும் பெண் பார்க்க சென்று, பெண்ணையும் பிடித்துப்போய் கல்யாணமும் நிச்சயம் செய்யப்படும். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தினால், அந்த திருமணம் கடைசி நேரத்தில் தடைபட்டுவிடுமாம்.

இதனால் ஜோஸ் ரொம்பவே நொந்து போயிருக்கிறார். ஒவ்வொரு முறையும் தன்னுடைய கல்யாணம் தடைபடுவதற்கு காரணமே, அந்த கடவுள்தான் என்று உறுதியாக நம்பியிருக்கிறார்.. இதனால் கடவுள் மீது கோபம் வந்துவிட்டது.

வாக்குமூலம் : நல்ல காரியம் செய்ய விடாமல் தடுக்கும் கடவுள் மீது தன்னுடைய கோபத்தை காட்ட நினைத்தாராம். அதனால்தான், சாலையோரம் இருந்த இந்த தேவாலயங்களின் மீது அவர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்... அப்பறமென்ன? கல்யாணம் ஆகாமலேயே இப்போது 'மாமியார்' வீட்டுக்கு போய்விட்டார் ஜோஸ்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+