முதல்வர் வேட்பாளர் - அஇஅதிமுகவில் ஓபிஎஸ் ராசி ஒர்க்அவுட் ஆகுமா - எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று பெரும் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ராசிப்படி அவர் நினைத்தது நடக்குமா? வெற்றி கைக்கு வருமா என்று பார்க்கலாம்.
சென்னை: அஇஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியா? ஓ.பன்னீர் செல்வமா என்ற பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு இடையே ஓபிஎஸ்க்கு நியூமராலஜி படி
எப்படி இருக்கும் என்று கணித்துள்ளார் எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்.
அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்று ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நீயா நானா போட்டி நடக்கிறது. மக்கள் செல்வாக்கு யாருக்கு கிடைக்கும் என்று எண்கணிதத்தின் அடிப்படையில் பார்க்கலாம்.
ஓ.பன்னீர் செல்வம் கூட்டுத்தொகை பெயர் கூட்டுத்தொகை 60 வருகிறது. அவரது பிறந்த தேதி கூட்டுத்தொகை 22 அதாவது 4. ஓபிஎஸ் பொதுவாகவே ஓ பாசிட்டிவ் பிளட் குரூப் மாதிரி எல்லோருடனும் நல்லா பழகுவார். விடாப்பிடிக்காரர். அஇஅதிமுக கட்சியின் கூட்டுத்தொகை AIADMK 106 மொத்த கூட்டுத்தொகை 7 இது கேதுவின் ஆதிக்கம் கொண்ட எண். மிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் ரொம்ப அமைதியான குணாதிசயம் கொண்டவர்கள் இந்த கட்சிக்காரர்கள்.
அஇஅதிமுக தொடங்கப்பட்ட நாள் 17-10-1972 கட்சி கூட்டுத்தொகை 1. ஓபிஎஸ் காலத்தின் கட்டாயத்தினால் மூன்று முறை முதல்வராக பதவியேற்றிருக்கிறார். மூன்று முறையும் காபாந்து முதல்வர். முன்பு நெடுஞ்செழியன்தான் காபாந்து முதல்வர் இப்போது ஓபிஎஸ்.
மீண்டும் மீண்டும் சந்திப்பு...உடையுமா முதல்வர் க்ளைமேக்ஸ்... இவர்கள்தான் இந்தப் பட்டியலில்!!
ஓ.பன்னீர் செல்வம் அறிவும் ஆற்றலும் கொண்டவர் வசீகரமான பேச்சினால் கவர்ந்து விடுவார். சவால்களை சாதனைகளாக மாற்றுவார். தானாக சில விசயங்களில் அடங்கிப்போவார். வில்லத்தனம் செய்ய நினைத்தால் அதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்பார் ஓபிஎஸ்
ஒளிவு மறைவு என்பது இவருக்கு தெரியாது. பெயரும் புகழும் செல்வாக்கும் கொண்டவர். காரியத்தை வெற்றி பெற வைக்க கடவுளை நாடுவார். இதன் மூலமாக விடாப்பிடியாக வெற்றி பெறுவார்.
இவருக்கு காஸ்மிக் எனர்ஜி அதிகம் கிடைக்கிறது. இவரது எண்ணங்கள் நிறைவேறுகிறது. எண் கணிதப்படி ஐந்தும் நான்கும் சேர்ந்து பல உதவிகளை செய்கிறது. நிறைய விசயங்களை கற்றுக்கொண்டு அதை அற்புதமாக வெளிப்படுத்துவார். மனித நேயமும் பக்குவமும் கொண்டவர்.
நானே மந்திரி நானே ராஜா என்று நினைப்பவர்.அமைதி ஆனந்தம் கொண்டவர். இவருக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இவர் அமைதி காப்பதே எதிர்காலத்திற்கு நல்லது.