Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல வருஷம் கழிச்சு வந்து வனமகன், பார்த்த உடன் ஓடி வந்து பாசத்தை பொழிந்த யானைகள்.. நெகிழ வைத்த வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீண்ட நாளைக்கு பின், தன் பாகனை பார்த்த உடன் ஓடி வந்து யானைகள் பாசத்தை பொழிந்த வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. யானைகள் தனக்கு உதவியர்களையும், தனக்கு அன்பு காட்டியவர்களையும் எவ்வளவு நாள் ஆனாலும் மறப்பத்தில்லை என்பதை இந்த வீடியோ நிரூபித்துள்ளது.

பார்ப்பதற்கு மிகப்பெரிய மற்றும் மிக அதிக எடையுள்ள முரட்டு விலங்காக தோன்றும் யானைகள், பாசம் வைத்தால் பச்சக்குழந்தைகளை போல் நடந்து கொள்ளும் தன்மை உடையவை.. தன் மீது பாசம் வைத்து தன்னை அன்பாக பார்த்து கொள்பவர்களிடம் குழந்தை போல் மாறி பாசத்தை பொழியும். அவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும். அவர்களை காணாவிட்டால் கண்டிப்பாக ஏங்கும்.

Elephant caretaker returns after years away and his elephants run towards him: see the video

யானைகள் பொதுவாக கூட்டமாக வாழக்கூடியவை. அவை உறவுகளை பிரிந்து தனியாக சுற்ற வேண்டிய நிலை வந்தால் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும். பொதுவாக கூட்டமாக செல்லும் யானைகள் எந்த பாதிப்பையும் நமக்கு ஏற்படுத்தாது. ஆனால் தனியாக ஒற்றை யானையாக சுற்றும் காட்டு யானைகள் மிகவும் ஆபத்தானவை.

தனக்கு வேண்டி கரும்பு, வாழைப்பழம் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பிடித்தமான உணவுப்பொருட்களை லாரிகள் ஏற்றி செல்வதை தொலைவிலேயே மோப்பம் பிடிக்கும் யானைகள், பசி எடுத்தால் சாலைகளில் செல்லும் லாரிகளிடம் இருந்து வேண்டிய உணவுகளை பறித்தக் கொள்ளும். அதேபோல் கோபமூட்டும் வகையில் வாகன ஓட்டிகள் நடந்து கொண்டால், திருப்பி கடுமையாக தாக்கவும் தயங்காது. கார்களை, லாரிகளை, பேருந்துகளை கூட தாக்கும். இருசக்கர வாகனத்தில் யானைகள் நடமாட்டம் உள்ள மலைப்பகுதிகளில் செல்வது மிகவும் தவறானது.

ஆசிய யானை மற்றும் ஆஃப்ரிக்க யானை என இரண்டு வகையில் யானைகள் இருக்கின்றன. இதில் பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது. யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது. மனிதனை போலவே இன்றும் யானைகள் தாய்வழிச் சமூகமாகவே வாழ்கின்றன. இதில் பெண் யானைகள் தான் கூட்டத்திற்கு தலைமை தாங்குகின்றன. இடம் விட்டு இடம் நகரும்போதும் கூட முதலில் பெண் யானைகளே முன்னால் சென்று வழிகாட்டுகின்றன. அதனைப் பின்தொடர்ந்துதான் மற்ற யானைகளும் செல்வது வழக்கமாக உள்ளது. குழந்தைகள் தன் தாயின் கைகளைப் பிடித்து நடப்பது போல, யானைக் குட்டிகளும் தன் தாய் யானையின் வால்களைப் பிடித்து நடக்கும்.

யானைகள் தங்களுக்குள்ளாகவே பேசிக்கொள்ளும் திறன் கொண்டவை. நாம் எப்படி பேசுகிறோமே அதே போன்றே யானைகளும் தங்களுக்குள் செய்திகளைப் பறிமாறிக்கொள்ளும் விதமாக, முனகல்கள் முதல் உரக்க பிளிறுதல் வரை பலவிதமாக பேசுகின்றன.


நம்மை போன்றே யானைகளுக்கும் ஞாபகசக்தி கூடுதலாக இருக்கின்றன. யானைகளிடம் நன்கு பழகிவிட்டு, பத்து இருபது வருடங்கள் கழித்து சென்று அதைச் சந்தித்தால், நம்மை அடையாளம் கண்டுகொள்ளும் ஆற்றல் உடையது. அப்படித்தான் யானைக்கூட்டம் தனது பாகனை பல வருடங்கள் கழித்து அடையாளம் கண்டு அவர் மீது பாசத்தை பொழிந்துள்ளன. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+