ஊட்டி குடியிருப்புக்குள் புகுந்த கழுகு.. முதுகில் மர்ம கருவியைப் பார்த்து ஆடிப்போன மக்கள்
நீலகிரி மாவட்டம் ஊட்டியின் இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பாதைகளில் ஒன்றான கல்ஹட்டி பகுதியில், ஆள் நடமாட்டம் அதிகமுள்ள அண்ணா நகர் குடியிருப்புக்குள் பிரம்மாண்டமான கழுகு ஒன்று திடீரென தரை இறங்கியது. வழக்கமாக உயரமான மரங்களில் அல்லது மலைமுகடுகளில் காணப்படும் பிணந்தின்னி கழுகு, ஊருக்குள் புகுந்து வீடுகள் மற்றும் கடைகளின் அருகே அமர்ந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சரியமும் அச்சமும் அடைந்தனர்.
அந்த கழுகைப் பார்த்த மக்கள், அது சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் பறந்து சென்றுவிடும் என்று முதலில் கருதினர். ஆனால், நீண்ட நேரமாகியும் அந்தக் கழுகு குடியிருப்புப் பகுதியிலேயே சுற்றித் திரிந்ததால் சந்தேகமடைந்த மக்கள், அதனை உற்றுப் பார்த்தனர். அப்போது அந்தப் பறவையின் முதுகில் ஒரு சிறிய பிளாஸ்டிக் கருவியும், அதன் கால்களில் ஆங்கில எண்கள் பொறிக்கப்பட்ட வளையமும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஆராய்ச்சிப் பறவையின் வருகை: அதிர்ச்சியில் உறைந்த ஊட்டி மக்கள்
இதுகுறித்து உடனடியாக ஊட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், அந்தக் கழுகைப் பரிசோதித்தபோது அது சாதாரணக் கழுகு அல்ல, அழிந்து வரும் இனத்தைச் சேர்ந்த பிணந்தின்னி கழுகு என்பதை உறுதி செய்தனர். அதன் முதுகில் பொருத்தப்பட்டிருந்தது அதன் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் ஜி.பி.எஸ் கருவி என்பதும் தெரியவந்தது.
வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இது பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி எனப்படும் புகழ்பெற்ற மும்பை இயற்கை வரலாற்று பாதுகாப்பு அமைப்பால் வளர்க்கப்பட்ட கழுகு என்பது அம்பலமானது. கழுகுகளின் நடமாட்டம் மற்றும் அவற்றின் வாழ்விடப் பகுதிகளை ஆய்வு செய்வதற்காக இந்த அமைப்பினர் மும்பையில் இருந்து கழுகுகளுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்தி வனப்பகுதிக்குள் பறக்க விட்டுள்ளனர்.
இந்தக் கழுகு கடந்த சில நாட்களாகவே முதுமலை புலிகள் காப்பகத்தைச் சுற்றியுள்ள எப்பாநாடு மற்றும் சீகூர் பகுதிகளில் தென்பட்டுள்ளது. அங்கிருந்து உணவு அல்லது தங்குமிடம் தேடி தற்போது கல்ஹட்டி மலைப்பாதையில் உள்ள அண்ணா நகர் பகுதிக்கு வந்துள்ளது. அங்குள்ள ஒரு டீ கடையின் அருகே அந்தக் கழுகு அமர்ந்திருந்தபோது, பொதுமக்கள் ஆர்வமிகுதியால் அதன் அருகே சென்று செல்ஃபி எடுக்கவும் புகைப்படம் எடுக்கவும் முயன்றனர்.
நீலகிரி வனப்பகுதியும் அரிய வகை பிணந்தின்னி கழுகுகளும்
பிணந்தின்னி கழுகுகள் இயற்கையின் துப்புரவாளர்கள் என்று அழைக்கப்படுகின்றன. காடுகளில் இறந்து கிடக்கும் விலங்குகளின் உடல்களை உண்டு, நோய் பரவாமல் தடுப்பதில் இவற்றின் பங்கு மிக முக்கியமானது. நீலகிரி மற்றும் முதுமலைப் பகுதிகளில் இத்தகைய கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், மத்திய அரசும் பல்வேறு அமைப்புகளும் இவற்றைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. அண்ணா நகரில் சுற்றித் திரியும் இந்தக் கழுகை வனத்துறையினர் தற்போது ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர்.
வனப்பகுதிக்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியில் அமர்ந்திருக்கும் இந்த கழுகைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் மக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜி.பி.எஸ் கருவியுடன் கூடிய இந்தக் கழுகு ஒருவேளை ஊருக்குள் அசௌகரியமாக உணர்ந்தால், அதனைப் பிடித்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது போன்ற ஆராய்ச்சிப் பறவைகள் ஊருக்குள் வருவது அரிதான ஒன்று என்பதால் ஊட்டி மக்களிடையே இது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்














Click it and Unblock the Notifications