இன்று முதல் திருச்சி-யாழ்ப்பாணம் விமான சேவை..4 நாட்களில் குறைந்த செலவில் "சர்வதேச ஆன்மீக சுற்றுலா"!
சென்னை: தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு இன்று முதல் தினசரி விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன. இதனால் இலங்கையில் தமிழர்கள் வாழும் பூர்வீக பூமிக்கு குறைந்த நாட்களில், குறைந்த செலவில் எளிதாக 'சர்வதேச ஆன்மீக சுற்றுலா' சென்று திரும்பும் வாய்ப்பும் நமக்கு கிடைத்துள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புக்குதான் தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது திருச்சியில் இருந்து இலங்கையில் தமிழர்களின் பூர்வீக நிலமான யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்துக்கும் தினசரி விமான சேவைகளை இயக்குகிறது இண்டிகோ நிறுவனம்.

திருச்சியில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் செல்வதற்கு 1 மணிநேரம்தான். இதனால் இலங்கையில் தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணம் உள்ளடங்கிய வடக்கு, திருகோணமலையை உள்ளடக்கிய கிழக்கு பகுதிகளுக்கு இனி எளிதாக ஆன்மீக சுற்றுலா செல்லலாம்.. அது எப்படி என பார்ப்போம்.
திருச்சியில் இருந்து புறப்பட்டு 1 மணிநேரத்திலேயே யாழ்ப்பாணத்தை சென்றடைந்துவிடலாம். அதே நாளிலேயே யாழ்ப்பாணத்தில் உள்ள சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலான, நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று வழிபடலாம். இதன் பின்னர் சரித்திரப் புகழ்பெற்ற யாழ்ப்பாணம் கோட்டையை பார்வையிடலாம். அன்று இரவு யாழ்ப்பாணத்தில் தங்கி ஓய்வெடுக்கலாம்.

2-வது நாளாக தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் இருந்து கூப்பிடும் தொலைவில்தான் இருக்கும் இலங்கையின் நயினா தீவில் உள்ள நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு படகில் சென்று வழிபாடு நடத்தலாம். அதன் பின்னர் சர்வதேச புகழ் வாய்ந்த யாழ்ப்பாணம் நூலகத்தைப் பார்வையிட்டு பின்னர் பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் கோவிலில் தரிசனம் செய்யலாம். 2வது நாளாக யாழ்ப்பாணம்- மன்னார் பயணத்தை நிறைவு செய்துவிட்டு திருகோணமலையில் இரவு தங்கலாம்.
3-வது நாளாக, திருகோணமலையில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற பாடல் பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வர் ஆலயம் சிவபெருமானை தரிசித்துவிட்டு திருகோணமலை துறைமுகம், கிண்ணியாவில் உள்ள வெந்நீர் ஊற்றைப் பார்வையிட்டு வற்றப்பலையில் உள்ள கண்ணகை அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தலாம். அன்று இரவு பருத்தித்துறையில் தங்கலாம்.

4-வது மற்றும் இறுதி நாளில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து வல்வெட்டித்துறை, தொண்டைமனாறு செல்வ சந்நிதி முருகன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் சென்றுவிடலாம். அடுத்த ஒரு மணிநேரத்தில் திருச்சிக்கு திரும்பிவிடலாம். குறைவான நாட்களில் மிகவும் குறைவான செலவில் ஒரு சர்வதேச ஆன்மீக சுற்றுலாவுக்கு தயாராகுங்கள் மக்களே!

-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications