கொடைக்கானலில் அவ்வளவு எளிதாக யாருமே போக முடியாத இடம்.. கேரளா இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இடம்
கொடைக்கானல்: கொடைக்கானல் பக்கத்தில அவ்வளவு எளிதாக யாருமே போக முடியாத இடம் ஒன்று இருக்கிறது. அந்த இடம் கேரள இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகும். இயற்கை அத்தனை அழகையும் அங்கே ஒளித்து வைத்து இருக்கிறது. அந்த இடத்திற்கு கேரளா வழியாகவே போக முடியும்.
தமிழ்நாடு கேரளாவை இணைக்கும் பகுதி கொடைக்கானலில் இருக்கிறது. இந்த ஏரியாவிற்கு இரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுமே அவ்வளவு எளிதாக போய்விட முடியாது. கூகுளில் கொடைக்கானல் டூ மூணாறு பாதையை போட்டீர்கள் என்றால், தேனி, போடி, வழியாக காட்டும். அதை பாதையை நடந்து செல்லும் வழி என்று போட்டீர்கள் என்றால். பூம்பாறை, மன்னவனூரை அடுத்த கடவேரி வழியாக வட்டவடாவை அடைந்து அங்கிருந்து டாப் ஸ்டேசன், மாட்டுப்பட்டி அணையை அடைந்து மூணாறு போக முடியும்.

எளிதான இந்த பாதை 1990களில் மூடப்பட்டு விட்டது. தற்போதைய நிலையில், கொடைக்கானல் அருகே கிளாவரையில் இருந்து கேரள மாநில எல்லையில் உள்ள கடவேரி வரை ஜீப்பில் போய்விட முடியும். ஆனால் அதன்பிறகு கொட்டக்கம்பூர் வரை உள்ள 8 கிலோ மீட்டர் தூரம் பாதை இல்லை.. பாதை பல இடங்களில் சேதம் அடைந்து பயணிக்கவே முடியாத நிலையில் இருக்கிறது. அதை தாண்டி வந்தால் வட்டவாடா என்ற கிராமம் இருக்கிறது. அதாவது கடவேரியில் இருந்து 11.5 கிமீ தூரம் வரை தள்ளி உள்ள வட்டவடாவிற்கு சரியான பாதை இல்லை..

அதேநேரம் கேரளாவின் மூணாறு வழியாக வட்டவடாவிற்கு போக முடியும். வட்டவடாவும், அந்த வழியாக கடவேரி சென்று கொடைக்கானல் செல்லும் திரில்லிங்கான பாதையும் கேரள மக்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாகும். பலரும் வந்து செல்லும் பகுதி என்றாலும், வட்டவடாவிற்கோ அல்லது கொட்டக்கம்பூருக்கோ வனத்துறை அனுமதி இல்லாமல் வாகனத்தில் போக முடியாது. அதேபோல் கொட்டக்கம்பூரில் இருந்து வனத்துறை அனுமதி இல்லாமல் நடந்து கூட கடவேரி போக முடியாது. அதேபோல் தமிழ்நாட்டின் கிளாவரையில் இருந்து கேரள மாநிலம் கிளாவரைக்கும் வனத்துறை அனுமதி இல்லாமல் போக முடியாது.
இதில் முக்கியமான வியூ பாய்ண்டான வட்டவடாவிற்கு வனத்துறை அனுமதியுடன் போக முடியும். வட்டவடா என்பது நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கு பகுதியாகும். வட்டவடாவில் தங்க வேண்டும் என்றால் அங்கு ரூம் எடுத்திருக்க வேண்டும். அப்போது தான் அனுமதிப்பார்கள்..
மூணாறில் இருந்து டாப் ஸ்டேசன் வருபவர்கள் அங்கிருந்து இரண்டு செக் போஸ்டை கடந்து வர வேண்டியதிருக்கும். போய்விட்டு உடனே வருவது என்றால் அனுமதிப்பார்கள். இல்லாவிட்டால் ரூம் எடுத்திருந்தால் மட்டுமே தங்கி சுற்றி பார்க்க அனுமதிப்பார்கள். தட்டு தட்டுக்களாக அல்லது படிக்கட்டு படிக்கெட்டாக உள்ள நிலங்களில் மக்கள் விவசாயம் செய்கிறார்கள். மிக அமைதியாக அற்புதமான கிராமம் தான் வட்டவடா.. வட்டவடாவில் அருவி உள்ளது.
அதேபோல் நிறைய பழத்தோட்டங்கள் அமைந்துள்ளது. அங்குள்ள ஸ்டாபெரி பழ தோட்டம் மிகவும் பிரபலம் ஆகும். தங்கும் விடுதிகள் பல மலைகளின் சரிவில் அற்புதமாக அமைந்துள்ளது. இங்குள்ள எல்லா இடங்களுமே இயற்கை அப்படியே உள்ள இடங்கள் ஆகும். இந்த இடத்திற்கு கேரள மக்கள் அதிகம் பேர் வந்து செல்கிறார்கள். கொடைக்கானல் வழியாக போக முடியாது என்பதால் பலரும் மூணாறு வழியாக வருகிறார்கள். ஒருமுறையாவது போக வேண்டிய இடம் ஆகும்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications