Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் இருந்து மகாபலிபுரத்திற்கு சுற்றுலா.. ஒரு குடும்பத்திற்கே இப்படியா ஆகணும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் உலக புகழ் பெற்ற சுற்றுலா தலம் ஆகும். பல்லவர்களின் சிற்பக் கலையை பறைசாற்றும் மகாபலிபுரத்தில் உள்ள இடங்கள் அனைத்துமே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புகழ் பெற்ற இடங்கள். சென்னைக்கு மிக அருகில் உள்ள மகாபலிபுரத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் செல்கிறார்கள். முற்றிலும் சுற்றுலா நகரமாக மாறிவிட்ட மகாபலிபுரத்தில் கடற்கரையில் குளிப்பது பலருக்கும் பிடிக்கும். அங்கு சென்று குளித்த ஒரே குடும்பத்தினருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

சென்னை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் கடற்கரை, கடற்கரை கோவில், குகைக்கோவில், கலங்கரை விளக்கம், பஞ்ச பாண்டவ குகை, அர்ஜுனனின் தவம், கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து, பஞ்ச ரதம் சீஷெல் அருங்காட்சியகம், சிற்ப அருங்காட்சியகம், வராஹ குகை கோயில், கணேச ரத கோயில் என பல இடங்கள் உள்ளன. இவற்றை எல்லாம் சுற்றி பார்க்க வரும் பலர் மகாபலிபுரத்தில் உள்ள மிக அழகான கடற்கரையில் குளிக்கிறார்கள். இந்த கடற்கரை பார்க்க மிக அழகாக இருக்கும்.

what happened to Chennai family on holiday in Mahabalipuram Relatives waiting for two days

மகாபலிபுரம் ஏன் ஆபத்தானது

ஆனால் இந்த கடற்கரை எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதேபோல் ஆபத்தையும் கொண்டுள்ளது. இங்கு குளிப்பதற்கு தடை உள்ளது. ஆனால் பலர் இதனை பொருட்படுத்துவதே இல்லை.. சில நாட்களில் குளத்தில் உள்ள தண்ணீர் போல் மகாபலிபுரம் கடற்கரை அமைதியாக இருக்கும். ஆனால் பெரும்பாலான நாட்களில் மிக ஆக்ரோஷமாக இருக்கும். திடீரென ராட்சத அலைகள் வந்து குளிப்பவர்களை தூக்கி சென்றுவிடும். மகாபலிபுரத்தில் சுற்றுலாவாக வந்தவர்கள் குளித்த போது பல அசம்பாவிதங்கள் நடந்துள்ளது. அப்படித்தான் சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு நடந்துள்ளது.

சென்னையில் இருந்து சுற்றுலா

சென்னை அகரம் பகுதியை சேர்ந்த 37 வயதாகும் வெங்கடேசன் என்பவர் தச்சு தொழில் செய்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெங்கடேசன் தனது மகள்கள் கார்த்திகா (17), துளசி (16) மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 17 பேருடன் சூளேரிக்காடு கடற்கரைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

இழுத்து செல்லப்பட்ட சகோதரிகள்

அங்கு கடலில் குளித்தபோது ராட்சத அலையில் வெங்கடேசன், அவரது மகள்கள் கீர்த்தனா, துளசி, ஆகியோர் ஒரே நேரத்தில் நடுக்கடலுக்கு இழுத்து செல்லப்பட்டார்கள். கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட வெங்கடேசன் உடல் கரை ஒதுங்கியது. கடலில் மாயமான கீர்த்தனா, துளசி ஆகியோரது உடலை மாமல்லபுரம் போலீசார் மீனவர்களின் உதவியுடன் படகு மூலமும், கடலோர பாதுகாப்பு படையின் விமானம் மூலமும் 2 நாட்களாக தீவிரமாக தேடினர்.

கலங்கிய உறவினர்கள்

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் கார்த்திகா, துளசி இருவரது உடல்கள் அழுகிய நிலையில் சூளேரிக்காடு கடற்கரையில் கருங்கல் பாறைகளில் சிக்கி ஒதுங்கி இருந்ததை கண்டு மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து அழுகிய நிலையில் காணப்பட்ட கார்த்திகா, துளசி இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2நாட்களாக கடற்கரையில் காத்து கிடந்த உறவினர்கள் அழுகிய நிலையில் இருவரது உடல்களையும் பார்த்தபோது கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது.

மகாபலிபுரம் கடற்கரையில் குளித்தால் என்ன சிக்கல்

மகாபலிபுரம் கடற்கரையில் தயவு செய்து குளிக்க வேண்டாம். திடீரென அசம்பாவிதங்கள் நடக்கும் வாய்ப்பு உள்ள ஆபத்தான கடற்கரை என்பதால் தவிர்ப்பதே நல்லது. இதற்கு காரணம் இருக்கிறது. குளிக்க அனுமதியே தந்தாலும், நடைமுறையில் ஆபத்தாக இருக்க சில காரணம் இருக்கிறது. ஏனெனில் மகாபலிபுரம் கடற்கரையை பொறுத்தவரை கிழக்கு கடற்கரையாக இருக்கிறது. இங்கு அலைகளின் ஓட்டம் (நீரோட்டங்கள்) மற்றும் ரிப் டைட்ஸ் எனப்படும் திடீர் இழுவிசை நீரோட்டங்கள் மிகவும் வலுவாக இருக்கும். இதனால் நீச்சலில் திறமை வாய்ந்தவர்கள் கூட கடலுக்குள் திடீரென இழுக்கப்படும் அபாயம் உள்ளது. நீரில் மூழ்குதல் சம்பவங்கள் அடிக்கடி நடக்க இதுவே காரணம் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+