Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாழ்ந்தால் பெரியகுளத்தில் வாழனும்.. வாழ்க்கையை வெறுத்தவர்களும் வாழத்தோன்றும்.. அற்புதமான இடங்கள்

Subscribe to Oneindia Tamil

தேனி: வாழ்ந்தால் பெரியகுளத்தில் வாழ வேண்டும்.. வாழ்க்கையை வெறுத்தவர்களும் இங்கு வந்தால் வாழத்தோன்றும் அற்புதமான இடங்கள் இருக்கின்றன. மஞ்சளாறு, சோத்துப்பாறை, வைகை அணை, கும்பக்கரை, அடுக்கம், அகமலை என இயற்கையின் கொடை இந்த ஊரை ஓட்டித்தான் உள்ளது.

இயற்கை ஒரு ஊரில் அத்தனை அழகையும் கொட்டி வைத்திருக்கிறது என்றால் அது நிச்சயம் தேனி மாவட்டம் பெரிகுளம் தான்.. தமிழ்நாட்டின் மிக பழமையான நகரங்களில் ஒன்றான பெரியகுளத்தில் இருந்து கூப்பிடும் தூரத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. இன்றைக்கு சென்னை, மதுரை, கோவை, பெங்களூர் என பல்வேறு நகரங்களில் தண்ணீரில் விளையாடும் சறுக்கு விளையாட்டுக்கு பல ஆயிரங்களை கொட்டுகிறார்கள்.. ஆனால் பெரியகுளம் பகுதியில் இயற்கையான வழுக்குப்பாறைகள் ஏராளம்.. அவ்வளவு அற்புதமான இடத்தை விட்டு வந்தவர்கள் இன்றும் சொந்த ஊருக்கு வர ஏங்குவார்கள்.. எத்தனை அருவி இருக்கிறது என்பதை எண்ணவே முடியாது..

you should live in Periyakulam Manjalar Sothuparai Vaigai Dam Kumbakarai are the gift of nature

பெரியகுளத்தில் இருந்து வெறும் 7 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கும்பக்கரை அருவி. இந்த அருவியில் ஆண்டின் பெரும்பாலான நாட்கள் தண்ணீர் வரும்.. கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி தண்ணீர் அப்படியே அங்கு தான் வருகிறது.. மூலிகை தண்ணீர் அருவியாக கொட்டுவதால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதுமே வருவார்கள். கொடைக்கானல் வருபவர்கள் தவறவிடக்கூடாத இடங்களில் இதுவும் ஒன்று...

you should live in Periyakulam Manjalar Sothuparai Vaigai Dam Kumbakarai are the gift of nature

கும்பக்கரை அருவியை போல அடுக்கம் கிராமம் வழியாக கொடைக்கானல் பயணமும் அற்புதமான அனுபவமாக இருக்கும். இப்போது போக முடிகிறதா என்பது தெளிவாக தெரியவில்லை.. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. இருசக்கர வாகனத்தில் மட்டும் போக முடிகிறது. கார்களில் போக முடியாத நிலை சில மாதங்களாக இருக்கிறது. உண்மையில் வாழ்வில் ஒரு முறையாவது பெரியகுளம்-கும்பக்கரை-அடுக்கம்-பெருமாள் மலை வழியாக கொடைக்கானல் போய் வர வேண்டும்.. அங்கு எத்தனை அருவிகள், எத்தனை நீர் வழிப்பாதைகள் இருக்கும் என்பதை எண்ணவே முடியாது. அவ்வளவு அழகான பாதை.. ஆனால் அந்த பாதையில் மாலை நேரத்திற்கு பிறகு போகவே முடியாது.. அப்படி போனால் வனவிலங்குகளிடம் சிக்க வேண்டிய நிலை வரும்..

you should live in Periyakulam Manjalar Sothuparai Vaigai Dam Kumbakarai are the gift of nature

இதேபோல் மஞ்சளாறு அணையும் அற்புதமான இடம் ஆகும்.. மஞ்சளாறு அணையின் முழு தோற்றத்தை கொடைக்கானல் செல்லும் பாதையில் பலர் பார்த்திருப்பார்கள்.. ஆனால் கீழே போய் பாருங்கள் இப்படி ஒரு இடத்திற்கு போகாதது ஏன் என்பதை நீங்களே உங்களை பார்த்து கேட்பீர்கள். மூங்கிலை காமாட்சி அம்மனை பார்த்துவிட்டு அப்படியே பயணித்தால் அந்த இயற்கை அழகு உங்களை சொக்க வைத்துவிடும். தலையாறு அருவி இங்கு தான் உள்ளது.. ஆனால் போக முடியாது..

அதேபோல் சோத்துப்பாறை அணை சூப்பரான இடம் ஆகும்.. ஆனால் ஏனோ அங்கு உள்ளே செல்ல வனத்துறை அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை.. அந்த இடம் வேறலெவலில் இருக்கும். கொடைக்கானல் பேரிஜம் ஏரி தண்ணீர் தான் சோத்துப்பாறை அருவிக்கு வருகிறது. சோத்துப்பாறை அணை நீர் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். சோத்துப்பாறை அணை நிறைந்து தண்ணீர் வழியும் காலத்தில் அல்லது சோத்துப்பாறையில் தண்ணீர் உள்ள காலங்களில் போனால், மாங்காய் தோப்புகள் மற்றும் சுற்றிலும் மலைகளுக்கு நடுவில் குளிக்க முடியும். இங்கு குளிக்க பலருக்கும் பிடிக்கும்.

you should live in Periyakulam Manjalar Sothuparai Vaigai Dam Kumbakarai are the gift of nature

இதேபோல் சோத்துப்பாறைக்கு மேல் அகமலை என்ற மலைக்கிராமம் இருக்கிறது. இந்த இடமும் அற்புதமாக இருக்கும். இந்த இடத்திற்கு செல்ல ஜீப் வசதி மட்டுமே உள்ளது. இருசக்கர வாகனத்தில் போக முடியும். ஆனால் வனத்துறை அனுமதி பெற வேண்டும். இதேபோல் சோத்துப்பாறை போகும் வழியில் சின்னியம்பாளையம் ஆறு இருக்கிறது. இந்த இடம், யாருமே இல்லாத அற்புதமான ஆற்றுப்பாதையாகும்.. அங்கு போய் குளித்துவிட்டு சாப்பிட்டு வந்தால், திரும்பி வர மனசே வராது..அப்படியான ஒரு இடம் ஆகும்..

you should live in Periyakulam Manjalar Sothuparai Vaigai Dam Kumbakarai are the gift of nature

இதேபோல் பெரியகுளத்தில் இருந்து சில கிலோ மீட்டர் பயணித்தால் கல்லாறு என்ற ஒரு ஆறு வரும்.. இது இயற்கையான நீச்சல் குளம் என்று சொல்லலாம்.. அவ்வளவு அற்புதமான இருக்கும். மேலிருந்து குதித்து குதித்து பலர் வார இறுதிகளில் மகிழ்வார்கள்.. இந்த இடம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பலருக்கும் பிடித்த இடம் ஆகும்.

இதேபோல் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் வழுக்குப்பாறை மற்றும் வரட்டாறு பகுதிகளில் உள்ள அருவிகளும் அற்புதமான அனுபவத்தை உங்களுக்கு தரும். இதுதவிர எண்ணற்ற அருவி மற்றும் ஆறுகள் பாய்ந்தோடும் இடங்கள் உள்ளன. அந்த இடங்கள் எல்லாம் தேனி பகுதியில் உள்ளவர்களுக்கே இன்னும் தெரியாது. பல இடங்கள் பெரிய அளவில் மனிதர் போகாத இடங்கள் ஆகும். மொத்தத்தில் பெரியகுளத்தில் உள்ள இடங்கள் எல்லாமே வாழ்க்கையை வெறுத்தவர்களும் வாழத்தோன்றும் அருமையான இடங்கள் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+