Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? சென்னையில் எப்படி இருக்கும்? வானிலை மைய இயக்குனர் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தும் சென்னை வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறிய விவரத்தை பார்க்கலாம்.

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னையில் பெய்த பெருமழை ஒட்டுமொத்த நகரையே வெள்ளத்தில் மிதக்க வைத்தது. டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை மாநகரமே தத்தளித்தது. மழை விட்ட பிறகும் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை முழுமையாக திரும்ப கிட்டத்தட்ட ஒருவார காலம் ஆனது. மழை பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், சென்னையில் இன்று மழை பெய்ய தொடங்கியது.

 Chance of moderate rain in Chennai for next two days; Meteorological Center Director Balachandran

விட்டுவிட்டு லேசான மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. எனினும், சென்னையில் கடந்த ஒரு வாரமாக மழையின்றி பனி அதிகரித்தது. இந்த நிலையில், இன்று மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 5 நாட்கள்: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 5 தினங்களுக்கு தென் தமிழக பகுதிகளில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கையை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவடடங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 16 ஆம் தேதி புதுக்கோட்டை ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் டெல்டா மாவட்டங்கள், மதுரை விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டஙக்ளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் எப்படி?: 17 ஆம் தேதி கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களீல் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் அரியலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 1

8 ஆம் தேதி தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு நகரின் சிலபகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+