சுடச்சுட சாப்பாடு.. சென்னை மக்களுக்கு விநியோகிக்கும் மாநகராட்சி.. 86 உணவுக் கூடங்களின் விவரம் இங்கே!
சென்னை: கனமழை காரணமாக, சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களிலும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 86 பொது உணவுக் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இன்று மதியம் தக்காளி சாதம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னையின் பிரதான சாலைகள், குடியிருப்புகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை, மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் உணவுக் கூடங்களில் உணவு சமைத்து, பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் 86 பொது சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பொது உணவுக் கூடத்தில் இன்று காலை முதலே உணவு தயாரிக்கப்பட்டு வந்தது. இன்று மதியம் தக்காளி சாதம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, சென்னை மாநகராட்சி முழுவதும், அனைத்து வார்டுகளிலும், உணவு சமைக்கப்பட்டு, மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் மேற்பார்வையில் பொதுமக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி சார்பில் மண்டலம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள உணவு கூடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உணவு தேவைப்படுபவர்கள் இங்கு தொடர்பு கொண்டால் உணவு வழங்கப்படும். 3 வேளையும் உணவு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.













Click it and Unblock the Notifications