சென்னையில் நாளை வானம் தெரியாது.. குளிர் அதிகரிக்கப்போகுதாம்.. மக்களே கவனம்!
சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை (நாளை) அதிகாலையில் கடும் பனிமூட்டம் இருக்கும். இதனால் வானம் தெரியாது எனவும், பொதுமக்களை குளிர் ஆட்டுவிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல இடங்களில் தற்போது மழை இல்லை. வடகிழக்கு பருவமழை குறைந்துள்ள நிலையில் குளிர் அதிகரித்துள்ளது. குறிப்பாக மலை பிரதேசங்களில் மாலை முதல் காலை வரை குளிர் அதிகமாக உள்ளது. இது டிசம்பர் மாதம் வழக்கமான ஒன்று தான்.

அதேபோல் மலை பிரதேசங்களை தவிர தமிழகத்தில் பிற மாவட்டங்களில் குளிர் என்பது நிலவி வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் இரவில் பனிப்பொழிவு உள்ளது. இந்த பனிப்பொழிவு அதிகாலை வரை நிலவுகிறது. இதனால் குளிரால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் சென்னையில் நாளை அதிகாலையில் கடும் பனிமூட்டம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வானம் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது. அதுபற்றி வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் வானம் பனிமூட்டமாக காணப்படும் வாய்ப்பு உள்ளது. அதிகாலையில் எதிரே வரும்ஆட்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருக்கலாம். அதேபோல் குளிரும் இருக்கும். சென்னையின் சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 23 டிகிரி செல்சியஸாக நிலவ வாய்ப்புள்ளது. அதேபோல் அதிகாலை வேளைக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாக இருக்க வாய்ப்புள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications