சென்னையில் நாளை வானம் தெரியாது.. குளிர் அதிகரிக்கப்போகுதாம்.. மக்களே கவனம்!
சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை (நாளை) அதிகாலையில் கடும் பனிமூட்டம் இருக்கும். இதனால் வானம் தெரியாது எனவும், பொதுமக்களை குளிர் ஆட்டுவிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல இடங்களில் தற்போது மழை இல்லை. வடகிழக்கு பருவமழை குறைந்துள்ள நிலையில் குளிர் அதிகரித்துள்ளது. குறிப்பாக மலை பிரதேசங்களில் மாலை முதல் காலை வரை குளிர் அதிகமாக உள்ளது. இது டிசம்பர் மாதம் வழக்கமான ஒன்று தான்.

அதேபோல் மலை பிரதேசங்களை தவிர தமிழகத்தில் பிற மாவட்டங்களில் குளிர் என்பது நிலவி வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் இரவில் பனிப்பொழிவு உள்ளது. இந்த பனிப்பொழிவு அதிகாலை வரை நிலவுகிறது. இதனால் குளிரால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் சென்னையில் நாளை அதிகாலையில் கடும் பனிமூட்டம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வானம் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது. அதுபற்றி வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் வானம் பனிமூட்டமாக காணப்படும் வாய்ப்பு உள்ளது. அதிகாலையில் எதிரே வரும்ஆட்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருக்கலாம். அதேபோல் குளிரும் இருக்கும். சென்னையின் சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 23 டிகிரி செல்சியஸாக நிலவ வாய்ப்புள்ளது. அதேபோல் அதிகாலை வேளைக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாக இருக்க வாய்ப்புள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications