அடி வெளுக்கும் மழை! சென்னை தொடங்கி.. குமரி வரை 15 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்! உஷார் மக்களே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோடை வெயில் மண்டையை பிளந்து வந்த நிலையில், தற்போது கோடை மழை பெய்து கிளைமேட்டை ஜில்லென மாற்றியிருக்கிறது. இந்நிலையில் இன்று சென்னை தொடங்கி 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். சென்னையிலும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் பல்வேறு இடங்களிலும் பரவலாக காலை முதல் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் காரணமாக சென்னை மக்கள் அவதிப்பட்டு வந்திருந்த நிலையில், இந்த மழை சற்று நிம்மதியை கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications