மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த மழை.. 8, 9 ஆம் தேதி சம்பவம் இருக்கு.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் வரும் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மீண்டும் கனமழை (Chennai Weather Alert) பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் சென்னையில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை, காரைக்காலில் வரும் 10 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வரும் 8 ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. மாலைக்கு பிறகு இரவில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் வரும் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

அடுத்த ஒரு வார மழை அப்டேட்
இதேபோன்று சென்னையில் இன்றும், நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 9 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* தமிழகம், புதுவை, காரைக்காலில் வரும் 10 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
* வரும் 8 ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* வரும் 9 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* சென்னையில் இன்றும், நாளையும் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications