Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதெல்லாம் அழிவிற்கான அறிகுறி! தாங்க முடியாத வெயிலுக்கு இடையே நடந்த ஷாக் சம்பவம்! உடம்பே சிலிர்க்குதே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் நிலவும் வானிலை.. உலகம் எங்கே மிக மோசமான வானிலையை நோக்கி.. மிக மோசமான காலநிலை மாற்றத்தை நோக்கி செல்கிறதோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. காலநிலை மாற்றம் கையை மீறி செல்கிறதோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

இந்தியாவில் மிக நீண்ட வெப்ப அலை நிலவுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு மிக நீண்ட வெப்பநிலை இந்த வருடம்தான் சென்னையில் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக டெல்லியில் வெப்பச்சலனம் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

climate change weather

டெல்லி தலைநகர் பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களில் கடுமையான வெப்ப அலை நிலவுகிறது. அடுத்த 1 வாரத்திற்கு டெல்லியில் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலைகள் இருக்கும் என்று வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இரவு நேரங்கள் கூட கடுமையாக சூடாக இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

இன்று டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று கணித்துள்ளது.

மரணம்: இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று டெல்லியில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கே கடுமையான வெயில் காரணமாக.. மரத்தில் தொங்கும் வவ்வால்கள் சூடு தாங்காமல் பலியாகி கீழே விழுந்து உள்ளன. வெப்பம் தாங்காமல் பலியாகி அந்த வவ்வால்கள் கீழே விழுந்துள்ளன.

டெல்லியில் நிலவும் வானிலை.. உலகம் எங்கே மிக மோசமான வானிலையை நோக்கி.. மிக மோசமான காலநிலை மாற்றத்தை நோக்கி செல்கிறதோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

காலநிலை மாற்றம்: தீவிரவாதம்.. சர்வாதிகாரம்.. வேலையின்மை.. வறுமை ஆகியவை உலகின் மிகப்பெரிய பிரச்சனைகளாக தோன்றினாலும், அதை விட பெரிய பிரச்சனை ஒன்றை நாம் சத்தமின்றி எதிர்கொண்டு வருகிறோம். அதுதான் காலநிலை மாற்றம்!

உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது.

ஐநாவும் இந்த காலநிலை மாற்றம் குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து இருக்கிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில மாதங்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை. அந்த அளவிற்கு உலகம் முழுக்க காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.

முக்கியமாக 2024 மிக அதிகமான வெப்பமான ஆண்டாக இருக்கும் என்பதால், பெர்மாஃப்ரோஸ்ட் கரைந்து இறுதியில் ஸோம்பி வைரஸ்களை வெளியிடும் ஆபத்து முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது என்று பிரான்சின் தெற்கில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லியில் கடுமையான வெயில் காரணமாக.. மரத்தில் தொங்கும் வவ்வால்கள் சூடு தாங்காமல் பலியாகி கீழே விழுந்து உள்ளன. வெப்பம் தாங்காமல் பலியாகி அந்த வவ்வால்கள் கீழே விழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+