போடு தகிட தகிட.. தமிழகத்தில் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. எங்கெங்கே? லிஸ்ட் இதோ!
சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஃபெங்கல் புயலாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் இன்று விழுப்புரம், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஃபெங்கல் புயலாக உருமாற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தற்போது அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி வரும் நிலையும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக இந்த புயல் சின்னம் காரணமாக, இதன் காரணமாக மயிலாடுதுறை ,நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் காரைக்காலிலும் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மேலும் தேர்வுகள் உள்ளிட்டவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் இன்று விழுப்புரம், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கன மழை காரணமாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் நடைபெறும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதே போல கடலூர் மாவட்டம் அரசு கலைக் கல்லூரியில் இன்று நடைபெற இருந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் பணிக்கான நேர்முகத் தேர்வும் டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கூட்டுறவு சங்க விற்பனையாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருந்த நிலையில் அந்தத் தேர்வு கனமழை எச்சரிக்கை காரணமாக டிசம்பர் 4 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கன மழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் இன்று நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வு நெறியாளர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications