Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிக்ஜாம் புயல்.. கரையை கடக்கும் போது எப்படி இருக்கும்?.. சுழன்றடிக்கப்போகும் சூறாவளி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலானது கரையை கடக்கும் நேரத்தில் சுமார் 80 முதல் 100 கி.மீ. வரை காற்று வீச வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமையடைந்து நிலை கொண்டிருந்தது. இன்று காலையில் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமையடைந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

Cyclone Michaung: What will it be like when crossing the shore

நாளைய தினம் அதாவது இன்னும் 24 மணி நேரத்தில் புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலானது நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பொதுவாகவே புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசக்கூடும். அதி கனமழை கொட்டித்தீர்க்கும். சில புயல்கள் காற்றை மட்டும் கொடுத்து விட்டு மழையை குறைத்து விடும். மாண்டஸ் புயல் கரையை கடந்த போது பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் வர்தா புயல் கரையை கடந்த போது சென்னையை சூறையாடி விட்டு சென்றது அந்த அளவிற்கு பலத்த சூறாவளி காற்று சுழன்றடித்தது.

ஆந்திர மாநிலத்தில் மிக்ஜாம் புயலானது கரையைக் கடந்தாலும் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

4ஆம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மிக்ஜாம் புயலானது டிசம்பர் 5ஆம் தேதி கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வரை காற்று வீச வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளைய தினம் கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கரையை கடக்கும் நேரத்தில் சுமார் 80 முதல் 100 கி.மீ. வரை காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+