டிட்வா புயல்.. இலங்கையை புரட்டிப்போட்ட கனமழை.. உயிரிழப்பு 40ஆக அதிகரிப்பு.. 17 மாவட்டங்கள் பாதிப்பு!
கொழும்பு: இலங்கை கடந்த இரு வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 40 பேர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. அதேபோல் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் கூறியுள்ளது. கனமழை தொடரும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் திட்வா புயல் காரணமாக கடந்த இரு வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த கனமழையால் 17 மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக தேயிலை தோட்ட பகுதிகளான நுவரெலியா, பதுல்லாவில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

பதுல்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 16 பேர் உயிருடன் புதைந்ததாக இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் பெய்து வரும் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.
20க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கின்றனர். 17 மாவட்டங்களைச் சேர்ந்த 1,158 குடும்பங்களில் உள்ள 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு, சுமார் 400 வீடுகள் பாதி சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு தரப்பில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகாப்டர் உதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனிடையே கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட மழைநீர் சூழ்ந்துள்ளது. இன்னொரு பக்கம் நிலச்சரிவால் பல்வேறு சாலைகளும் முடங்கி இருக்கின்றன. சில பகுதிகளில் மழைநீர் வீட்டின் மேற்கூரை வரை உயர்ந்து இருக்கும் காட்சிகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications