Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவு முழுக்க மழை கொட்டும்.. சென்னை + 19 மாவட்டங்களில் பெரிய சம்பவம்.. வானிலை மையம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் வெப்பம் பரவலாகக் குறைந்து, குளிர்ச்சியான ஒரு வானிலையே நிலவுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் இந்தப் பருவமழை சீசன் ஆரம்பித்து முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இந்தாண்டு இயல்பான அளவிலேயே மழை பெய்து வரும் சூழலில், பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடந்த ஒரு வாரமாகவே பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்கிறது. இதனால் வெப்பம் குறைந்து ஒரு குளிர்ச்சியான ஒரு வானிலையே நிலவுகிறது.

For Next three hours 20 districts of Tamil nadu will get good rain says meteorological department

20 மாவட்டங்களில் மழை

இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதேபோல ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மழை

அதாவது சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், மழை காரணமாக இந்த மாவட்டங்களில் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பு ஏற்படலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை கொட்டும்

நாளை செப்டம்பர் 22 முதல் 24 வரை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் செப்டம்பர் 25 முதல் 27 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை கிளைமேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்றைய தினம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (செப்டம்பர் 22ம் தேதி): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+