அடுத்த 1 மணி நேரம்.. இடி மின்னலுடன் வெளுக்க போகும் மழை.. சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. இந்த நிலையில் அடுத்த 1 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்பட தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. சென்னை வானிலை ஆய்வு மையமும் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை, வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது. வானிலை மையம் கூறியதுபோலவே சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது.

heavy-rain-with-thunder-and-lightning-expected-in-7-districts-including-chennai-in-the-next-1-hour

இந்த நிலையில் அடுத்த 1 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில், அதாவது இன்று இரவு 7 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+