அடுத்த 1 மணி நேரம்.. இடி மின்னலுடன் வெளுக்க போகும் மழை.. சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. இந்த நிலையில் அடுத்த 1 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்பட தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. சென்னை வானிலை ஆய்வு மையமும் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை, வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது. வானிலை மையம் கூறியதுபோலவே சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த 1 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில், அதாவது இன்று இரவு 7 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications