புரட்டியெடுத்த மழையால் விக்கிரவாண்டி ஹைவேயில் பாய்ந்த வெள்ளம்.. ஊர்ந்து சென்ற வாகனங்கள்!
விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக விக்கிரவாண்டியில் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. விடிய விடிய இடைவிடாது கொட்டிய கனமழையால் பல இடங்களில் வெள்ள நீர் கடல் போல காட்சியளிக்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையிலும் வெள்ளம் பாய்ந்தோடியதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வெள்ளத்தில் ஊர்ந்து சென்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளகியுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29 ஆம் தேதி மதியம் புயலாக மாறியது. இந்த ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் புதுச்சேரி-மரக்காணம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கத்தொடங்கியது. புயல் கரையை கடக்க தொடங்கியதில் இருந்து புதுச்சேரியில் மழை பெய்யத் தொடங்கியது.

குறிப்பாக நேற்று முன்தினம் இரவு மரக்காணம் பகுதியை புயல் நெருங்கிய போது சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. 70 கி.மீ. முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. புயல் கரையை கடந்த பின்னரும் அதன் கோரத்தாண்டவம் நீடித்தது. இதனால் புதுவையில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது.
அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அதி கனமழை, விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. புயல் கரையை கடந்த போது சூறாவளி காற்று வீசியதுடன் கனமழையும் பெய்தது. இதனால், விழுப்புரத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. விழுப்புரம் பேருந்து நிலையம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. நேற்று காலையும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
புயல் கரையை கடந்த பிறகும் காற்றின் வேகம் குறையாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணியில் இருந்து நேற்று மாலை 6 மணி வரை முடிந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலத்தில் 51 செ.மீ. மழையும், திண்டிவனத்தில் 37 செ.மீ. மழையும் பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையிலும் செண்டர் மீடியனை உடைத்தபடி வெள்ளம் பாய்ந்தோடியது.
தமிழகத்தின் மிக முக்கியமான இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடி சென்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த விக்கிரவாண்டி வி.சாலை அருகில் தான் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் விஜய்யின் தவெக மாநாடு நடைபெற்றது கவனிக்கத்தக்கது. விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் அங்கு வெள்ள பாதித்த இடங்களில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
விழுப்புரம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செமீ மழை பதிவாகியது. புதுச்சேரி நகரில் 49 செமீ மழையும், புதுக்கண்ணில் 45 செமீ மழை, திருக்கனூரில் 43 செமீ மழை, கடலூரில் 18 செமீ, சென்னை மீனம்பாக்கத்தில் 11 செமீ மழை பதிவாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகத்தில் தலா 20 செமீ மழை பதிவாகியது. திருக்கழுக்குன்றம் 18 செமீ, தாம்பரத்தில் 15 செமீ, செய்யூரில் 15 செமீ, மாமல்லபுரத்தில் 13 செமீ மழை பதிவானது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications