Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் விடிய விடிய கொட்டிய கனமழை! தரமணி, நெமிலிச்சேரியில் ஒரே இரவில் 6 செ.மீ. மழை பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. சென்னையில் தரமணி, நெமிலிச்சேரியில் ஒரே நாள் இரவில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் காலையில் வெயில் சுட்டெரிக்கிறது. மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

weather rain chennai

இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் முகப்பேர், கோயம்பேடு, அம்பத்தூர், நெற்குன்றம், நொளம்பூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டியது. அது போல் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் நள்ளிரவில் மழை கொட்டியது.

தரமணி, நெமிலிச்சேரியில் ஒரே இரவில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், " தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக" மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இதன் காரணமாக நள்ளிரவில் சென்னையில் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவினாலும், தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதன் விளைவாக அதிகாலையில் பணிக்கு செல்வோர் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு ஆளாகினர்.

20.07.2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

21-07-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகள்:

19-07-2025 முதல் 20-07-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21-07-2025 மற்றும் 22-07-2025: தமிழக-ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+