மேஜிக் மாதிரி.. சட்டென வடிந்த மழை வெள்ளம்.. கைகொடுத்த கடின உழைப்பு.. நம்ம சென்னையா இது!
சென்னை; சென்னை மழைக்கு இடையே மாநகராட்சி துரித நடவடிக்கையால் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. சென்னையில் உள்ள 22 போக்குவரத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மழையினால் சரிந்த 12 மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. லேசாக மழைநீர் தேங்கிய 41 இடங்களில், 31 இடங்களில் மழைநீர் முழுமையாக வடிந்தது- சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

இரவு மழை; நேற்று இரவு மழை பெய்த மழை காரணமாக சென்னையில் தேங்கிய தண்ணீர் உடனே வடிந்து உள்ளது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.
வெள்ள நீர் தடுப்பு: வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்ட பணிகள் கடந்த வருடம் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளன. கிட்டத்தட்ட இதற்காக சென்னையில் எல்லா சாலைகளிலும் குழி தோண்டப்பட்டது. சாலை ஓரங்களில் குழி தோண்டி பணிகளை செய்து வந்தனர். இது மக்களுக்கு கடுமையான இடைஞ்சல்களை ஏற்படுத்தியது. இருந்தாலும் மழை வெள்ளத்தை தடுக்கும் என்பதால் தொடர்ந்து பணிகள் நடந்தன.
Thank you @chennaicorp & @RAKRI1 sir for keeping our AGS Colony inundation-free despite heavy rains. Earlier it used to get flooded even for a short spell. Spl tks to @RajaSomasu sir&entire team of Z13,U39-W176. @GSBediIAS sir,we owe you a lot.Tku @Hassan_tnpyc sir @ @amith__mp pic.twitter.com/3LYeSIwCnv
— Geetha Ganesh Karthik (@GeethaGKarthik) November 14, 2023
பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர். பருவமழை நெருங்கி வருவதால் இந்த பணிகள் வேகமாக செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில்தான் மழை காரணமாக சென்னையில் பல சாலைகளில் வெள்ளம் ஏற்படாமல் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் மழை பெய்த போது வெள்ளம் வேகமாக வடிகிறதா என்று சோதனை செய்யப்பட்டது. அதன்படியே வேகமாக வடிந்தது. அப்போது சென்னையில் 90 சதவிகித பணிகள் முடிந்து இருந்தன.
இந்த நிலையில்தான் இந்த முறை சென்னையில் மழை காரணமாக எங்கும் தண்ணீர் தேங்காமல் மிக வேகமாக வடிந்துள்ளன.
Heavy spell of rain hits many parts of #Chennai!
— Greater Chennai Corporation (@chennaicorp) November 14, 2023
No stagnation of water in the subways of Chennai under the administration of GCC.
Thanks to the staff working tirelessly!
Gengu Reddy Subway, Zone 6👇 (1/7) #ChennaiCorporation | #ChennaiRains | #HereToServe pic.twitter.com/NNCNYYLgq7
மழை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
இதனால் தமிழ்நாட்டில் நாகை, தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காலை 8.30 மணி வரை தீவிர கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது
100 HP diesel pump operated at VGN Lakshmi Nagar, Nu - Tech Point in Div 156, Unit 35, Zone 12#ChennaiRains #ChennaiCorporation pic.twitter.com/SpxWiUHivw
— Greater Chennai Corporation (@chennaicorp) November 14, 2023
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1.தென்கிழக்க வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பாதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பாகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 15ஆம் தேதி போக்கில் நிலவக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 16ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஓட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும் என்று அறிவித்துள்ளது.
Hon'ble Mayor Ms. @PriyarajanDMK visiting areas which used to get inundated during rains in previous years.
— Greater Chennai Corporation (@chennaicorp) November 14, 2023
No water logging at Rajamannar Salai & RK Shanmuga Salai👇 (1/2)#ChennaiCorporation | #ChennaiRains | #HereToServe pic.twitter.com/YlLW67kvDG












Click it and Unblock the Notifications