12 டூ 20 செமீ மழை வாய்ப்பு.. ரெட் அலர்ட் வாபசுக்கு நடுவே தமிழகத்தில் இன்று, நாளை ஆரஞ்சு அலர்ட்
சென்னை: தமிழகத்துக்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாறாக இன்றும், நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் சில இடங்களில் குறைந்தபட்சம் 12 சென்டிமீட்டர் முதல் அதிகபட்சமாக 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யலாம் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை என்பது தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மெல்ல மெல்ல பெய்ய தொடங்கி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் சாரல் மழை என்பது கடந்த 2 நாட்களாக அவ்வப்போது பெய்து வருகிறது.

இந்நிலையில் தான் விரைவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்துக்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் காலநிலை மாற்றத்தால் ரெட் அலர்ட் என்பது வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆனாலும் ரெட் அலர்ட்டுக்கு பதில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட்டை பொறுத்தமட்டில் ஒரு நாளில் குறைந்தபட்சம் 115.6 மில்லி மீட்டர் (11.5 சென்டிமீட்டர்) முதல் 204.4 மில்லி மீட்டர் (20 சென்டிமீட்டர்) வரையிலான மழைப்பொழிய வாய்ப்புள்ளது.
இத்தகைய சூழலில் தான் இன்றும், நாளையும் தமிழகத்தின் சில இடங்களின் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 12-20 சென்டிமீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை, நாளை மறுநாள் மற்றும் ஜுன் 25 ஆகிய 3 நாட்களும் தமிழகத்துக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அதேபோல் கேரளா மற்றும் தெற்கு உள்கர்நாடகா பகுதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் இந்த பகுதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications