வெப்ப அலையால் உயரும் வெப்ப நிலை.. 5 நாட்கள் அலர்டாக இருக்கனும் மக்களே..! இல்லைனா அவ்வளவுதான்.!
டெல்லி : தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் மிகக் கடுமையான வெப்ப அலை பரவ கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. குறிப்பாக ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஒடிசாவிலும், ஏப்ரல் 17ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்திலும் பரவி வரும் வெப்ப அலை தென்னிந்தியாவிலும் பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறியுள்ளது.
தமிழகத்தின் கடந்த சில நாட்களாக வழக்கம் போல் அக்னி வெயில் தொடக்கத்திற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் காலை முதலே அதிக வெயில் இருப்பதால் பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர். மேலும் வெயில் மரணங்களும் அதிகரித்துள்ளது.

தினமும் 30 முதல் 35 டிகிரி செல்சியல் வரை வெப்பநிலை உள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலும் 5 நாட்கள் வெப்ப அலை பரவுவதோடு, வெயில் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்ப அலை: இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கிழக்கு இந்தியா மற்றும் தெற்கு தீபகற்ப இந்திய பகுதிகளான மேற்கு வங்கம், கர்நாடகா, ஒடிசா, தமிழகம், பிஹார், சிக்கிம், தெலங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும்.
எங்கெங்கே?: கடலோர ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கோவா, கேரளா, அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலைகளால் உண்டாகும் காற்றின் ஈரப்பதம் அசௌகரியத்தை உண்டாக்கலாம். சமவெளி பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு அதிகமாகவும், கடலோரப் பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ், மற்றும் மலைப் பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலாகவும் வெப்பநிலை உயரும் போது வெப்பஅலை ஏற்படும் என எச்சரித்துள்ளது.
செய்ய வேண்டியவை: அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்கியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே வெளியில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது தொப்பி மற்றும் குடையை பயன்படுத்துவது அவசியம். இதனால் வெளியில் செல்லும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
செய்யக் கூடாதவை: வெயில் காலத்தில் வயதானவர்கள் , குழந்தைகள் , நோய்வாய்ப்பட்டவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக அவர்கள் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.வெயில் உச்சத்தில் இருக்கும் 11 மணி முதல் மாலை 4 மணி வரை முடிந்தளவு வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கலாம். மேலும் வெயில் காலங்களில் தேவையில்லாமல் அதிக அளவு உடல் உழைப்பைத் தருவது, அல்லது வெறும் காலுடன் வெளியே செல்வது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications